Home » Archives by category » தமிழகம் (Page 34)

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

Comments Off on 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டவரான முத்துப்பாண்டி (வயது 35) என்ற இளைஞரின் உறவுக்காரர் வீட்டில் கடந்த 16.03.2022 அன்று தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு பின் போக்சோ […]

Continue reading …

*திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது*,

Comments Off on *திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது*,

*திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது*, திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் திண்டுக்கல் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் பாறை மேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணி(48) மதுபாலன்(31), நாகல் நகர் மதன்குமார்(31), ரவுண்ட் ரோடு விநாயகர் கோவில் தெரு தாமரைக்கண்ணன்(22), வேடப்பட்டி மாதவன்(23), சிறுமலை ராஜா(24) […]

Continue reading …

தேனி மாவட்டம் தேனியில் தொடரும் பட்டியல் இன இளைஞர்களின் மர்ம மரணம்….!

Comments Off on தேனி மாவட்டம் தேனியில் தொடரும் பட்டியல் இன இளைஞர்களின் மர்ம மரணம்….!

தேனி மாவட்டம் தேனியில் தொடரும் பட்டியல் இன இளைஞர்களின் மர்ம மரணம்….! சட்ட விரோதமாக தோட்டத்தில் அமைத்த மின்வெளியில் சிக்கி உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பக்கவுண்டன்பட்டி சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணகுமார் (35)இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் ஒன்னரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பரிமளா என்னும் நிலக் கிளாரின் தோட்டத்தில் சட்டத்துக்கு விரோதமாக மின்வெலி […]

Continue reading …

திமுக அரசு குறித்து அண்ணாமலை காட்டம்!

Comments Off on திமுக அரசு குறித்து அண்ணாமலை காட்டம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் […]

Continue reading …

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு? வானிலை மையம் தகவல்!

Comments Off on வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு? வானிலை மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம், “மே 22ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். அது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் புதுவையிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு […]

Continue reading …

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர் போராட்டம்.

Comments Off on சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர் போராட்டம்.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர் போராட்டம். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் 35 வயதான கூலித்தொழிலாளி கிருஷ்ணகுமார் இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளன. கடந்த 15 ஆம் தேதி குள்ளப்பகவுண்டன்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள தோட்டத்திற்கு கிருஷ்ணகுமார் கூலிவேலைக்கு சென்றபோது பரிமளா என்பவரின் தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். அவரது […]

Continue reading …

ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு!

Comments Off on ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு!

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற துணைவேந்தர் தனது மகளுக்காக 100 பவுன் நகைகள் சேர்த்து வைத்திருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி சின்னமணி தெருவை சேர்ந்த சுகுமார் மீன்வளக்கல்லூரியில் துணைவேந்தராக பணியாற்றி பின் ஓய்வு பெற்றார். சுகுமார் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்ற நேரம் பார்த்து மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நூறு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுகுமார் சென்னையிலிருந்து திரும்பி வந்த பின் தனது வீட்டில் 100 பவுன் […]

Continue reading …

வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்!

Comments Off on வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்!

நேற்று குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழந்தான். குற்றால அருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குற்றாலத்தில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பழைய குற்றாலம் அருவியில் நூற்றுக்கணக்கானோர் நேற்று (17.05.2024) குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், அலறியடித்துக் கொண்டு ஓடினர். எனினும், குளிக்கும் பகுதியில் இருக்கும் கம்பிகளில் பலர் சிக்கிக் கொண்டனர். சிலர் வெள்ளப்பெருக்கில் இழுத்துச் […]

Continue reading …

திருச்சி என்.ஐ.டி.யில் சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் கண்டுபிடிப்பு

Comments Off on திருச்சி என்.ஐ.டி.யில் சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் கண்டுபிடிப்பு

திருச்சி என்.ஐ.டி.யில் சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் கண்டுபிடிப்பு. திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சி.டி.ஏ.சி. ஆராய்ச்சியாளர்கள் இணைந்த குழுவினர் எளிமையான, சிக்கனமான, கையடக்கமான, திறன் வாய்ந்த சூரிய ஒளியில் இயங்கக்கூடிய மின் சாதனங்களை உருவாக்கியுள்ளது. இதில் சமூகத்தின் தற்போதைய தினசரி தேவைகளான சூரிய ஒளியில் இயங்கக்கூடிய கையடக்க மொபைல் சார்ஜர் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சோலார் பேனல்களுடைய தெருவிளக்குகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், என்.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறையின் பேராசிரியர் நாகமணியின் […]

Continue reading …

இயந்திரக்கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Comments Off on இயந்திரக்கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

திருச்சி விமான நிலையத்தில் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்றது. இந்த விமானத்தில் 167 பயணிகள் பயணித்த நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் இருவரும், திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சி விமான நிலையம் […]

Continue reading …