Home » Archives by category » தமிழகம் (Page 350)

மழைக்கால மருத்துவ முகாம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை, சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் !

Comments Off on மழைக்கால மருத்துவ முகாம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை, சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் !

தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம் மூலம் தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிவாரணப் பணிகள் மற்றும் அந்த பகுதிகளில் அமைக் கப்பட்டுள்ள மழைக்கால மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தினமும் நேரில் சென்று பார்வை யிட்டு வருகிறார். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா […]

Continue reading …

700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றி தகவல் சொன்ன தமிழக கோவில்!

Comments Off on 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றி தகவல் சொன்ன தமிழக கோவில்!

புதுடெல்லி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது. பூமிக்கு மேல் இயற்கையாகவே ஓசோன் படலம் அமைந்துள்ளது. சூரியனில் இருந்து வரும் உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத் தாக்காதவாறு அந்த படலம்தான் பாதுகாக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படலமானது காற்றில் கலந்து வரும் நச்சு வாயுக்களால் சமீபகாலமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை […]

Continue reading …

ஜல்லிக்கட்டு தொடர வேண்டும்: கமல்ஹாசன் !

Comments Off on ஜல்லிக்கட்டு தொடர வேண்டும்: கமல்ஹாசன் !

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று ‘வீர விளையாட்டு’ புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்தார். சென்னையில் புகைப்படக் கலைஞர் சுரேஷ் எடுத்த ஜல்லிக்கட்டு புகைப்படங்களை ‘வீர விளையாட்டு’ என்ற பெயரில் கண்காட்சியாக வைத்திருக்கிறார். இக்கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். நவம்பர் 8ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற இருக்கிறது. ‘வீர விளையாட்டு’ கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசிய கமல்ஹாசன், “‘ஜல்லிக்கட்டு’ தொந்தரவு பண்ற விழா என்று பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue reading …

குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞராவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் !

Comments Off on குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞராவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் !

மூன்று ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவம், இன்ஜினீயரிங் போன்ற தொழில் படிப்புகள்போல 5 ஆண்டு சட்டப்படிப்பை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய பார் கவுன்சில் தேர்தலுக்கும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டப் படிப்பு படிக்கவும், வழக்கறிஞராக பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தில் எஸ்.எம்.ஆனந்த முருகன் […]

Continue reading …

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு: நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி !

Comments Off on முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு: நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி !

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது எதிர்பார்த்ததை விட இருமடங்காகும். தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி இலக்கு நிர்ணையித்திருந்தது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை மாலை முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முக்கிய அம்சங்கள்: * “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு […]

Continue reading …

செப்.4 முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு !

Comments Off on செப்.4 முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு !

செப்டம்பர் 4-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த தமிழ்த் திரைப்படமும் வெளியாகாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”கோயம்பேடு ரோகிணி தியேட்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக்கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் வேலை செய்துவருகிறார். இதன் தொடர்ச்சியாக ‘பாயும்புலி’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார். தங்களுக்கு ஒரு பெரும்தொகை தரவேண்டும் என்றும், அந்தத் தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார். இதனை […]

Continue reading …

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !

Comments Off on அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !

உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனையை ஏழை, எளிய மக்களும் செய்துகொள்ளும் வகையில், முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, “நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் […]

Continue reading …

ராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் !

Comments Off on ராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் !

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் முடிந்ததும் இஸ்லாமிய மத குரு தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர், முன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் […]

Continue reading …

இந்திய கிராமங்கள் வறுமையிலிருந்து விடுபடுவதே உண்மையான வளர்ச்சி: ராமதாஸ் !

Comments Off on இந்திய கிராமங்கள் வறுமையிலிருந்து விடுபடுவதே உண்மையான வளர்ச்சி: ராமதாஸ் !

இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 3 லட்சம் கோடி டாலர் என்ற அளவுக்கு வளர்ச்சியடைவதைவிட, கிராம மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டனர் என்பதே மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியா தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட இரு புள்ளிவிவரங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத இருவேறு இந்தியாக்கள் இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன. முதலாவது, இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (Gross Domestic Product -GDP) 2 லட்சம் கோடி […]

Continue reading …

ஹெல்மெட் இன்று முதல் அவசியம்: மீறினால் ஆவணங்கள் பறிமுதல்!

Comments Off on ஹெல்மெட் இன்று முதல் அவசியம்: மீறினால் ஆவணங்கள் பறிமுதல்!

சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிச் செல்வது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதை மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கைப்பட்டு உள்ளது.இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது.அதன்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதுடன், உடன் பயணிப்பவர்களும் கட்டாயமாக […]

Continue reading …