
பல கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் இந்த நடவடிக்கைக்கு கலெக்டர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 2016ல் இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட காலத்தில் புதிய பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. அப்போது 10 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களும் வெளியிடப்பட்டன. அப்போது யாரோ அவை போலி என வதந்தியை பரப்பிவிட்டனர். 8 ஆண்டுகள் கடந்தும் பல ஊர்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாக்காசாகவே இருந்து வருகின்றன. அப்படியாக 10 ரூபாய் நாணயங்களையே இன்னும் மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. […]
Continue reading …
அமலாக்கத்துறை நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு நிபந்தனை விதித்துள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீன் மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்க துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை […]
Continue reading …
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலை அருகே காருக்குள் கிடந்த 3 பேரின் சடலம். கம்பம் மெட்டு சாலையோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற கார் காருக்குள் பெண் உட்பட 3 பேர் சடலமாக கிடந்தனர் – போலீசார் விசாரணை விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல் காருக்கு அருகே பூச்சி மருந்து பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு.
Continue reading …
பொதுமக்கள் விழுப்புரம் அருகே உள்ள கிணற்றில் மனித கழிவு கலந்ததாக புகார் கூறியிருந்தனர். அதில் மனித கழிவு கலக்கவில்லை என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். வேங்கை வயலில் கடந்த ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்ற ஒரு சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள குடிநீர் கிணற்றில் கலந்ததாக பொதுமக்கள் புகாரளித்தனர். சில மர்ம நபர்கள் மனித கழிவை குடிநீர் கிணற்றில் கலந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கிணற்றை ஆய்வு […]
Continue reading …
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில […]
Continue reading …
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வாரிசுரிமை சான்று கோரி பொய் தகவல்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன், தனது தந்தையின் மரணத்துக்குப் பின், வாரிசுரிமை சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு இரு மகள்கள், இரு மகன்கள் உள்ள நிலையில், தான் மட்டுமே […]
Continue reading …
ஆளுநர் மாளிகை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி அளிக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணை சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து […]
Continue reading …
17வது சிறுமி திருப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த விசாரணையில் மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் […]
Continue reading …
குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து.. தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன் கிளம்பிய அரசுப் பேருந்து, மலைச் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது பிரேக் செயலிழக்கவே, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. ஓட்டுநரின் செயலால், பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் சூழல் தவிர்க்கப்பட்டு, சிறிய அளவிலான விபத்தாக முடிந்தது. சிறு காயங்களுடன் பயணிகளும், ஓட்டுநரும் தப்பினர். […]
Continue reading …