
தேமுதிக வேட்பாளர் விஜய பிராபகரன் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி சிவகாசி அருகேயுள்ள அம்மையார்பட்டியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சண்முக பண்டியன் கிராம மக்களிடம் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தந்தை விஜயகாந்தை நினைத்து திடீரென கண்கலங்கினார். இதனையடுத்து கிராம மக்கள் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.
Continue reading …
டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் பிரச்சாரத்தில் குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன், அந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் அளவுக்கு சீசன் இருக்கும் என்றும் கூறியுள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தில் அவர், “தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குற்றாலத்தில் பழைய குற்றாலம், தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகள் இருக்கிறது. அந்த அருவிகளில் […]
Continue reading …
ஜூனியர் விகடன் எடுத்த கருத்து கணக்கில் தமிழக மற்றும் புதுவை என 40க்கு 40 திமுக கூட்டணி தான் வெல்லும் என்று கூறப்பட்டாலும் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்றும் அதிகபட்சமாக திமுகவுக்கு 33 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜூனியர் விகடன் டீம் தமிழகம் முழுவதும் தேர்தல் நிலவரம் குறித்து கருத்துக்கணிப்பு எடுத்துள்ளது. அதில், “திமுக கூட்டணிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதிமுகவுக்கு ஒரு தொகுதி […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “இப்போது விழித்துக் கொள்ளாவிட்டால் இனி எப்போதும் விழித்துக் கொள்ள முடியாது” என கூறியுள்ளார். வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது சமூகவலைத்தளத்தில், “பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் […]
Continue reading …
பாம்பு ஒன்று குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென நுழைந்து பயணியை கடித்து விட்டது. அந்த பயணி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையிலிருந்து குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று காலை கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆறாவது பெட்டியில் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் பயணம் செய்து கொண்டிருந்தார். எர்ணாகுளம் நிலையத்தை நெருங்கிய போது திடீரென ஒரு பாம்பு அவரை கடித்துவிட்டதாக தெரிகிறது. […]
Continue reading …
அன்புமணி ராமதாஸ், வாக்காளர்களுக்கு ஜெகத்ரட்சகன் பணம் கொடுப்பதாகவும் அதனை தேர்தல் அதிகாரி கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனைகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து ஆட்சியரை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர், “அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தோல்வி பயம் காரணமாக திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார். தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படது குறித்து வீடியோ ஆதாரத்துடன் […]
Continue reading …
திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் வாக்குப்பதிவு தவிர மற்ற அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் ஒருவேளை மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. வேட்பு […]
Continue reading …
10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு இந்திய ரயில்வே துறையில் ரயில்வே பாதுகாப்பு படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிக்க டிகிரி முடித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10வது அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு […]
Continue reading …