மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அரசமைப்புச் சட்டத்தை மீறிய மிகப்பெரிய கொள்ளைக்காரி என உச்சநீதிமன்றம் சொன்னதாக ஆ.ராசா கூறுவது பொய் என்று மூத்த வழக்கறிஞர் ஜோதி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஜோதி, முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்காக 12 வழக்குகளில் வாதாடி 11 வழக்குகளில் வெற்றிபெற்றுத் தந்ததாகக் கூறினார். ஆனால், 12ஆவது வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பாதியிலேயே சசிகலா தம்மை விரட்டி விட்டதாகவும், டிடிவி தினகரன் தனது உயிருக்கு உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி மிரட்டியதாகவும் […]
Continue reading …அறத்தின் பக்கம் நிற்கும் தன்னை பார்த்து சங்கி, பி டீம் என்று விமர்சிப்பவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக சமூகவளைதளங்களில் அதிமுகவினரும், திமுகவினரும் கமலஹாசன் மீது கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், […]
Continue reading …பிரசாந்த் கிஷோர் வழியில் ரஜினியின் பக்கா திட்டம் எங்க. அடிக்கணுமோ சரியா அங்க அடித்திருக்கிறார். ரஜினி கட்சி தொடங்குவார், தொடங்கமாட்டார் என பல்வேறு விவாதங்கள் பொது தளங்களில் தொடர்ந்து விவாத பொருளாக இருந்து வந்தது ரஜினி கட்சி தொடங்கவே மாட்டார் என ஒரு தரப்பும், ரஜினி கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர். இந்நிலையில் ரஜினி தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும், […]
Continue reading …அடுத்த 24மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளாத தகவல் மேலும் புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது என்று தகவல்.மணிக்கு 5 கிமீ வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து வருவதாகவும் தலவல். நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிமீ வரை காற்றின் வேகம் […]
Continue reading …இந்து மத சம்மத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹாசன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த நிலையில்,இரண்டு நாட்களுக்கு முன்பு காளி பூஜையை துவக்கிவைக்க ஷகிப் அல் ஹாசன் கொல்கத்தா சென்றுள்ளார். மேலும், காளி சிலையின் முன்பு வழிபடுவது போன்ற புகைப்படங்களும் வெளியானதால் இஸ்லாமியர்கள் கொள்கைக்கு எதிராகவும் அவர்களது மனதை ஷகிப் புண்படுத்திவிட்டார் என்று சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் […]
Continue reading …புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தவசிக்கு, நடிகர் சிலம்பரசன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். தனது உதவியாளர் மூலம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய நடிகர் சிம்பு மேலும் தவசியை செல்போனில் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து நலம் விசாரித்தார். இதேபோல் இயக்குநர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனியும் நடிகர் தவசிக்கு 50 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார்.
Continue reading …டிசம்பர் மாதத்திற்குள் சென்னை மெரினா கடற்கரையை திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் மாதத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றம் அதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கும். மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி பரிந்துரை. மேலும் மெரினாவில் 900 தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. மெரினா லூப் சாலையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது […]
Continue reading …அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா நோய் தடுப்பு மருந்து 95% வெற்றி என அறிவிப்பு. அமெரிக்காவின் மார்டனா என்ற நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றை தடுப்பதில் அமெரிக்க மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Continue reading …சயினத் துறவியான விஜய் வல்லப் சுரீஷ்வஜி மகாராஜ், எளிய வாழ்கையை வாழ்ந்து, மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றியவர் வாழ்ந்தவர். அவருடைய ஊக்குவிப்பால் பள்ளி கல்லூரிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-ம் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம், பாலியில் அமைதிக்கான சிலை’ என்று அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, […]
Continue reading …தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 328 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் 22 கோடியே 38 லட்சம் மதிப்பில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட 16 பணிகளை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, 37 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். ரவுடிகளால் வெடி குண்டு வைத்து கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியத்தின் மனைவி புவனேஸ்வரிக்கு அரசு பள்ளி […]
Continue reading …