Home » Archives by category » Uncategory (Page 18)

வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன், சீரழிந்த குடும்பம் !!

Comments Off on வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன், சீரழிந்த குடும்பம் !!

வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன் !!! புதுச்சேரியைச் சேர்ந்த 41 வயதாகும் கந்தசாமி. பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பலியானார். இது குறித்த வழக்கை விபத்து எனப் பதிவு செய்த போலிஸார் வழக்கு விசாரணையை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்த கந்தசாமியின் தாயாரிடம் விசாரணை நடத்திய போலிஸார் அவர் சொல்லிய […]

Continue reading …

கொரோனா போராட்டத்தில் திருநங்கைகளின் மனிதநேய நடவடிக்கைகள்

Comments Off on கொரோனா போராட்டத்தில் திருநங்கைகளின் மனிதநேய நடவடிக்கைகள்
கொரோனா போராட்டத்தில் திருநங்கைகளின் மனிதநேய நடவடிக்கைகள்

புதுச்சேரி, ,மே 07  திருநங்கைகள் – ஆண்பாலாகவும் இல்லாமல் பெண்பாலாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக இருப்பவர்கள்.  அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான்.  நம்மோடு இருப்பவர்கள்தான். ஆனால் பொது சமூகத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு போய் இருக்கின்றார்கள்.  குடும்பத்தோடும் அன்பான உறவு இல்லை; சமுதாயத்தோடும் தொடர்பு இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள, ஒதுங்கியுள்ள இந்த திருநங்கைகள் தங்களின் அன்றாட வாழ்வை நடத்துவதற்கே திண்டாடிப் போய் உள்ளனர். அரசாங்கத்தின் பார்வையும் பொது சமூகத்தின் அக்கறையும் இன்னமும் முழுமையாக இவர்கள் மீது படியவில்லை. விளிம்புநிலை மனிதர்களாகவே திருநங்கைகள் தொடர்ந்து வாழ்ந்து […]

Continue reading …

புதுச்சேரியில் 12,000 பேருக்கு இலவச ஹோமியோபதி மருந்து!

Comments Off on புதுச்சேரியில் 12,000 பேருக்கு இலவச ஹோமியோபதி மருந்து!
புதுச்சேரியில் 12,000 பேருக்கு இலவச ஹோமியோபதி மருந்து!

புதுச்சேரி,மே 6  கொரோனா வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கவோ மருந்தில்லாத சூழலில் சுய தற்காப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் கிருமி தொற்றாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வதும் தான் இப்போது நாம் செய்யக்கூடியவையாக  உள்ளன. கொரோனா வைரஸ் கிருமியானது  நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களிடம் எளிதாகத் தொற்றிக் கொள்கின்றது.  அதனால் தான் முதியவர்கள், ஏற்கனவே நோய் இருப்பவர்கள், குழந்தைகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் உள்ள நோய் […]

Continue reading …

தேசிய மாணவர் படையுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை!

Comments Off on தேசிய மாணவர் படையுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை!
தேசிய மாணவர் படையுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை!

புது டெல்லி,மே 05 கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்காக தேசிய மாணவர் படை (NCC) ஆற்றியுள்ள பங்கு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதிலும் உள்ள 17 NCC இயக்குநரகங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர், இதுபோன்ற மாநாட்டின் மூலம் உரையாடுவது இதுவே முதன் முறையாகும். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர், லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர் அஜித் குமார் ஆகியோரும் பங்கேற்றனர். […]

Continue reading …

தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

Comments Off on தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு வேண்டுகோள்!
தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

சென்னை,மே 3 “ஊரடங்கு தளர்வுகளில் தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் கொரானாவை எதிர் கொண்டு அதனை வீழ்த்திட மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு சுமார் 40நாட்களை கடந்து போன சூழலில் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், கடைகளுக்கு வாடகை செலுத்த இயலாமலும் அல்லல்பட்டு வருகின்றனர் இந்நிலையில் வரும் 4ம் தேதி முதல் மேலும் இரு […]

Continue reading …

புதுச்சேரி : ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் கற்பதற்குத் தடையில்லை!

Comments Off on புதுச்சேரி : ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் கற்பதற்குத் தடையில்லை!
புதுச்சேரி : ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் கற்பதற்குத் தடையில்லை!

புதுச்சேரி, ஏப்ரல் 25 மார்ச் 25 முதல் ஊரடங்கு என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பே புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. கல்வியாண்டின் இறுதி என்பதால் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு இருக்கவில்லை. 10ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்பட முடியாமல் நின்று விட்டது.  இத்தகையச் சூழலில் மாணவர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்தது. புதுச்சேரி அரசு இந்தப் பிரச்சனையை கவனத்தில் கொண்டு அனைத்து பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் தொடர்பு […]

Continue reading …

கறி விருந்தில் அரசு ஊழியர்கள் : குப்பைக் கூடைக்கு சென்ற 144 தடை உத்தரவு !

Comments Off on கறி விருந்தில் அரசு ஊழியர்கள் : குப்பைக் கூடைக்கு சென்ற 144 தடை உத்தரவு !
கறி விருந்தில் அரசு ஊழியர்கள் : குப்பைக் கூடைக்கு சென்ற 144 தடை உத்தரவு !

புதுச்சேரி,  ஏப்ரல், 25   வே. மாரீஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படியாவது புதுச்சேரி மக்களை காப்பாற்றி விட வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரவு பகல் என்று பாராமல் அரசு சுகாதாரத்துறை நிர்வாகத்தை முடுக்கிவிட்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி கொண்டு வரும் இந்த நேரத்தில், புதுச்சேரி அரசு வனத்துறை ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றி எந்தவித கவலைப்படாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஊரடங்கு உத்தரவை  குப்பைக் கூடைக்குள் கடாசிவிட்டு கறி […]

Continue reading …

எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது! -மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

Comments Off on எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது! -மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் பிறப்பித்ததற்கு நன்றி. எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில், ”நடப்பாண்டு மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்தி வைத்ததற்கு நன்றி. அவசர சட்டத்தால் இட ஒதுக்கீட்டின் பயனை மாணவர்கள் இந்த ஆண்டு அனுபவிப்பார்கள்.நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பால், லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும், […]

Continue reading …

ஆல்ப்ஸ் மலை விமான விபத்து: விமானி திட்டமிட்டே மலையில் மோதியதாக ‘திடுக்’ தகவல்!

Comments Off on ஆல்ப்ஸ் மலை விமான விபத்து: விமானி திட்டமிட்டே மலையில் மோதியதாக ‘திடுக்’ தகவல்!

பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலில், துணை பைலட் வேண்டுமென்றே அந்த விமானத்தை மலையில் மோதச் செய்தது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற 4யூ 9525 என்ற பயணிகள் விமானம், பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் விழுந்து நொறுங்கியது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், […]

Continue reading …

கள்ளப்படம்

Comments Off on கள்ளப்படம்

இசை அமைப்பாளர் கே , இசை உலகில் தனக்கு கிடைத்த நற்பெயரை தொடர்ந்து நடிகனாக , இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக  பணியாற்றிய ஜே . வடிவேல் இயக்கத்தில்  , இறைவன் films சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும்  ‘கள்ளப்படம் ‘ என்ற  படத்தில் அறிமுகமாகிறார். நான்கு இளைஞர்களையும் , திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர் பார்த்து நிற்கும் அவர்களின்  எதிர் கால கனவுகளையும் பற்றிய படம் இது .அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே . வடிவேலுவுடன் […]

Continue reading …