வேப்பந்தட்டை பகுதியில் அனைத்து மக்களுக்கும் காவிரி குடிநீர் திட்டம். பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி.

Filed under: தமிழகம் |

வேப்பந்தட்டை பகுதியில் அனைத்து மக்களுக்கும் காவிரி குடிநீர் திட்டம். பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி.

கோரையாறு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா தலம் அமைக்கப்படும்.
வேப்பந்தட்டை பகுதியில் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இன்றி காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று
பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி அளித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் என்.டி .சந்திரமோகன் அரசலூர், அன்னமங்கலம், விஸ்வகுடி,தொண்டமான் துறை, கோரையாறு,மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்னு அரும்பாவூர், பெரியம்மா பாளையம், பூலாம்பாடி,
உடும்பியம், கிருஷ்ணாபுரம்,
பெரிய வடகரை,நெற்குணம், நூத்தப்பூர்,கைகளத்தூர், வெண்பாவூர்,வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார். அப்போது வேட்பாளர் சந்திரமோகன் பேசும் போது,
வேப்பந்தட்டை பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக வந்தடையாமல் உள்ளது. அதனை நான் வெற்றி பெற்றவுடன் வேப்பந்தட்டையில் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க ஆவண செய்வேன்.
மேலும் கோரையாறு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் சுற்றுலாத்தலம் அமைக்க ஏற்பாடு செய்வேன் என்றார்.