செம்மரகடத்தல் தடுத்து நிறுத்திய போலிஸ் மீது  கார் மோதி கொலை. இருவர் கைது.

Filed under: இந்தியா |

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கே.வி பள்ளி அருகே இருக்கும் குன்றவாரி பள்ளி சாலை சந்திப்பு அருகே இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது செம்மரக்கட்டைகளை காரில் ஒரு கும்பல் கடத்தி வந்த நிலையில் அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.நிற்காமல் சென்ற அந்த கார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் கணேஷ் மீது மோதி அவரை கீழே தள்ளி சாய்த்தது. இந்த சம்பவத்தில் உடல் நசுங்கி கணேஷ் அதே இடத்தில் பரிதாபமாக மரணமடைந்தார்.
இந்த நிலையில் காரில் இருந்த ஐந்து பேரும் தப்பி ஓட முயன்ற நிலையில் அவர்களில் இரண்டு பேரை அருகில் இருந்த போலீசார் மடக்கிப் பிடித்தனர்.மூன்று பேர் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். காருடன் அதிலிருந்து ஏழு செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி பறிதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த மூன்று பேரில் இருவரை பிடித்த போலிஸார் மேலும் ஒருவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.