தேர்தல் ஆணையம் உத்தரவு: தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Filed under: தமிழகம் |

தேர்தல் ஆணையம் உத்தரவு:

தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் சரத் பவர் என இரண்டு அணிகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அஜித் பவார் அணியே தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்சியின் கொடி,

கடிகார சின்னம் ஆகிய இரண்டும் அஜித் பவார் அணிக்கே சொந்தம்
என தேர்தல் ஆணையம்
அறிவித்ததை கொண்டாடும்
வகையில்தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் அணி
திருச்சி மாவட்ட மண்டலத்
தலைவர் என். ஜெயக்குமார்
தலைமையில்நிர்வாகிகள் இனிப்பு வழங்கி
கொண்டாடினர்.

இதுகுறித்து மண்டல தலைவர் என். ஜெயக்குமார் கூறுகையில், இது யாருக்கும்
வெற்றி தோல்வி இல்லை.
அனைவரும் ஒன்றிணைந்து
செயல்பட அழைக்கிறேன் என்று கூறினார்.