அதிமுகவுக்கு பெருகும் முக்குலத்தோர் ஆதரவு.

Filed under: தமிழகம் |

அதிமுகவுக்கு பெருகும் முக்குலத்தோர் ஆதரவு.

அதிமுக கூட்டணி யார்… யார்..? இருக்கிறார்கள் என்று இன்னும் முடிவாகாத நிலையில், சின்ன, சின்ன கட்சிகள் மட்டுமே தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சேனை, அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு, மருது தேசிய கழகம் ஆகிய முக்குலத்தோர் அமைப்பினை சேர்ந்த தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களோடு வந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தனி தனியாக  சந்தித்து அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன், அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், மருது தேசிய கழகம் தலைவர் மருது பாண்டியன் சேர்வை ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து இருந்தனர். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் உடன் இருந்தார்.