கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு.

Filed under: தமிழகம் |

கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு – கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு , கருப்புக் கொடி கட்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே இப்பகுதியில் 2 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் இப்பகுதியில் புதியதாக கல்குவாரி அமைக்க கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்குவாரிகளால் ‌ விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், குடியிருப்பு பகுதி அருகே கல்குவாரி அமைக்க முயற்சி நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்