ஒ.பி.எஸ்க்கு எதிராக சிவகங்கையில்  கண்டன போஸ்டர்.

Filed under: தமிழகம் |

ஒ.பி.எஸ்க்கு எதிராக சிவகங்கையில்  கண்டன போஸ்டர்.

இன்று ஒ.பி.எஸ் தலைமையில் நெல்லையில் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களைச் சந்திக்க  ஓபிஎஸ் வரும் வேளையில் அவர் வருகையைக் கண்டித்து சிவகங்கை நகர அதிமுக நிர்வாகியான ராஜா என்பவர் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் ஓ. பன்னீர்செல்வத்தைக் கண்டித்து போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அந்த போஸ்டர்களில், ‘கழகத்தைக் கயவர்களுக்குக் காட்டிக் கொடுத்த பன்னீர் செல்வமே வராதே’ என்றும், ‘துரோகிகளுக்கு விலை போன அமாவாசை பன்னீர்செல்வமே உன்னை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது’ என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளது .

இந்த போஸ்டர் விவகாரம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே இந்த போஸ்டர் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாளை என்ன நடக்குமோ என்ற பதட்டத்தையும் உண்டு பண்ணியுள்ளது.