ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் தீப்பிடித்ததால் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் டயரில் பற்றிய தீயை அணைத்த பின்னர், மதுரை பணிமனைக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது.
அந்த மார்க்கத்தில் செல்லும் வேறு அரசு பேருந்துகளில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.