அமெரிக்காவில் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிலுள்ள டான்வில்லி பகுதியில் 38 வயதான பெண் ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது 16 வயதுள்ள இரண்டு மாணவர்களுடன் அவர் மூன்று முறை உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதேபோல் 32 வயதான ஹீடர் கேர் என்ற பெண் ஆசிரியரும் டீன் ஏஜ் […]
Continue reading …வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கேற்ப அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலையில் டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி சுவற்றில் துளையிட்டு கைதிகள் தப்பியுள்ளனர். “ஷஷாங்க் ரெடெம்ப்சன்” என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த திரைப்படத்தில் கதாநாயகன் ஆண்டி தான் சிறைவைக்கப்பட்டிருக்கும் அறையின் சுவரை கொஞ்சம் கொஞ்சமாக துளையிட்டு கிளைமேக்ஸில் அதிலிருந்து தப்பி சென்று விடுவார். அதுபோன்று உண்மையாகவெ தற்போது ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள சிறைச்சாலையில் கடந்த 20ம் தேதியன்று சிறை கைதிகளை […]
Continue reading …சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாகாணத்தில் திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. விபத்தில் சரக்கு ரயிலில் இருந்த 19,000 லிட்டர் டீசல் தரையில் கொட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. டீசல் நிலப்பரப்பில் கொட்டிய நிலையில் நீர் அல்லது வனவிலங்குகளின் பாதுகாப்புகள் குறித்த எந்த அறிகுறியும் தற்போது இல்லை என வாஷிங்டன் […]
Continue reading …வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பல ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்து அணுகுண்டு சோதனையை மேற்கொள்ள போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு சோதனை செய்யப்படும் ஏவுகணைகள் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் எல்லை பகுதிக்குள் சென்று விழுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை […]
Continue reading …டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த எவ்வித தடையும் கிடையாது. இந்நிலையில் அமெரிக்காவை அடுத்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான […]
Continue reading …அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலக வங்கியின் தலைவராக பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய உலக வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் என்பவர் வரும் ஜூன் மாதம் பதவி விலக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. புதிய உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா என்பவரை அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்திருப்பதாகவும் அவரது நியமனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் கார்டு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்த அஜய் […]
Continue reading …சமீபத்தில் உலகம் முழுவதிலும் முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக கூகுள் மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அவ்வகையில் உலகிலேயே அதிகளவில் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் என புள்ளி விவரப்பட்டியலில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா இந்தியா நெதர்லாந்து […]
Continue reading …சமீபத்தில் அமெரிக்காவின் வானில் தோன்றி வரும் உளவு பொருட்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் ராணுவ அணு சக்தி தளம் மீது கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று பறந்து சென்ற உளவு பலூன் ஒன்றை கடல் பரப்பில் வைத்து அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேநாளில் அலாஸ்காவிலும் மர்ம பொருள் ஒன்று தோன்ற அதையும் அமெரிக்க வான்படை சுட்டு வீழ்த்தியது. அதன்பின்னர் அண்டை தேசமான கனடாவிலும் பறக்கும் பொருள் ஒன்றை தாங்கள் […]
Continue reading …டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு […]
Continue reading …சீனாவை “நீங்க பலூன் விட்டு விளையாட எங்க அணுசக்தி ஏவுதளம்தான் கிடைச்சுதா?” என்று அமெரிக்கா கேள்வியெழுப்பி உள்ளது. சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு பகுதிக்குள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொண்டானா பகுதியில் ராணுவ பாதுகாப்புடன் கூடிய அணுசக்தி ஏவுதளம் ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட ஏவுதளம் பகுதியில் வானில் பறக்கும் பலூன் ஒன்று தென்பட்டது. அதை சுட்டு வீழ்த்தலாம் என நினைத்த ராணுவம் அதனால் ஏவுதளம் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என […]
Continue reading …