
பாஜகவிலிருந்து சமீபத்தில் காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதையடுத்து மேலும் ஒரு பிரபலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவி நீக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அண்ணாமலை அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் தலைவர் பாலசுந்தரம் ஆதரவாளர் ஆரூர் ரவி என்பவருக்கும் புதிய தலைவர் அருள் ஆதரவாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து […]
Continue reading …
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுக அரசு தயாரித்த கவர்னர் உரையை கவர்னர் படிக்கவில்லை என்றும் கவர்னர் ஒரு சில வார்த்தைகளை விட்டுவிட்டார் என்றும் சில வார்த்தைகளை இணைத்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு அரசு தயாரித்த உரையை கவர்னர் படிப்பதுதான் மாண்பு என்றும் அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதே திமுகவினரின் வாதமாக உள்ளது. திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் […]
Continue reading …
பாஜக தமிழ்நாட்டின் தலைவராக கடந்த 2021ம் ஆண்டு அண்ணாமலை தேசியத்தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிப்பட்டார். தற்போது, பாஜக ஆளுங்கட்சிக்கு எதிராக பல புகார்கள், விமர்சனங்களும் தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலலைக்கு மதத்தலைவர்கள் மற்றும், மாயோயிஸ்டுகளிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக உளவுத்துறை கூறியதாகவும், இதையடுத்து, ஒய் பிரிவிலுள்ள அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த இசட் பாதுகாப்பு பிரிவில் 33 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் […]
Continue reading …
கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பாஜகவிலிருந்து ஆறு மாதங்களுக்கு காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “பாஜகவிலிருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்க அண்ணாமலை தான் காரணம். அவரின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அண்ணாமலை பற்றி இனி நான் […]
Continue reading …
பாஜக கட்சியினர் அண்ணாமலையின் கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில்லை காட்டினால் முரசொலியின் மூலப்பத்திரத்தை காட்டுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர் செந்தில் குமார் உள்பட பல திமுகவினர் கடந்த சில நாட்களாக அண்ணாமலை கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில் எங்கே என கேள்வி எழுப்பினர். இது குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உட்பட இணையதளங்களில் வைரலாகின. திமுகவினரின் கேள்விகளுக்கு அண்ணாமலை உள்பட பாஜகவினர் அதிரடியாக பதில் அளித்து வந்தனர். தற்போது பாஜகவின் சிடி நிர்மல் குமார் தனது டுவிட்டரில் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகலா புஷ்பாவின் கார் மீது தாக்குதல் நடந்துள்ளதை குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக தமிழக பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் பெயரில் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் […]
Continue reading …
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அன்னூரில் விவசாய நிலங்களை பூங்கா அமைப்பதற்கு கையகப்படுத்த மத்திய அரசின் அறிவிப்புக்கு எங்களது போராட்டமே காரணம் என தெரிவித்துள்ளார். அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக நடத்திய மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது அறிவாலயம் அரசு. விவசாய பெருங்குடி மக்களின் குரலுக்கும் தமிழக பாஜகவினரின் குரலுக்கும் செவி சாய்த்த முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் திமுகவினர் வெட்கி தலைகுனிய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில உளவுத்துறை உறக்க நிலையில் உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில் ஷாரிக் என்பவர் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத செயல். இன்று முதல் நாளில் இருந்தே தமிழக பாஜக மட்டுமே கூறி வந்தது. ஷாரிக் […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுதும் வரும் 15ம் தேதி போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பால் விலை ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பால் விலை ஏற்றத்தை கண்டித்து வரும் 15ம் தேதி தமிழகம் முழுதும் போராட்டத்தில் பாஜக ஈடுபடும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். “பால் வழங்கும் நிறுவனம் அதன் நிர்வாக சீர்கேட்டினால் நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. தவறான நடைமுறையால் ஏற்படும் நஷ்டத்தை […]
Continue reading …