
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்று கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி அடுத்து […]
Continue reading …
பாஜக தலைவர் சென்னை மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக பேச்சாளர் சாதிக்கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் உள்ள குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ஜெயராம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி நடிகை குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். இந்நிலையில், இந்த மன்னிப்பை ஏற்காத குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து சைதை சாதிக் மீது வழக்கு பதிவு […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஒரு கேள்வி கேட்டால் அவருக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சாராய அமைச்சருக்கெல்லாம் மரியாதை கொடுக்க முடியாது என கூறியுள்ளார். காலையில் எழுந்தவுடன் எத்தனை ரூபாய்க்கு சாராயம் விற்கலாம், மதியம் எவ்வளவு சாராயம் விற்பனையாகிறது என்று கணக்கு பார்க்க கூடிய சாராய அமைச்சருக்கு மரியாதை கொடுக்க முடியாது. அவர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரையும் எடுத்து வருகிறார். அவருக்கு ஏன் மரியாதை? நான் ஏற்கனவே […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கடந்த சில வருடங்களாக விசாரணை செய்தது. சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் […]
Continue reading …
என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையில் போலீஸ்காரங்களே குறுக்க வராதீங்க என பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். பிரச்சினைகள் குறித்து டிஜிபியிடம் பேசியுள்ளோம். பாஜக சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பாஜக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் […]
Continue reading …
நீட் தேர்வினால் ஏற்படும் மாணவர்களின் தற்கொலைக்கு தூண்டுவது அமைச்சர்கள்தான் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு. மத்திய அரசின் தேர்வு குழுமம் இரவு நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருப்பது குறித்து கவனித்திருக்க வேண்டும். இதனால் மாணவ மாணவிகள் அனைவரும் இரவு நேரத்தில் முடிவுகளைப் பார்க்கும்போது ஆதரவாளர் அருகில் இல்லாத சூழல் நிலவி இருக்கலாம். […]
Continue reading …
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. மாநிலம் முழுவதும் இன்று பாஜக திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இன்று பாஜக தனது […]
Continue reading …
அதிமுக ஒற்றைத் தலை குறித்து கட்சிக்குள்ளே நிலவி வரும் களேபரத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி உள்ளது. ஆனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது. எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேரில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை வாழ்த்தி பதிவிட்டிருந்தார். அப்பதிவில் குறிப்பிட்டுள்ள வார்த்தை பட்டியலின மக்களை இழிவுபடுத்தியுள்ளதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவ்வகையில் தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடியை வாழ்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டிருந்தார். அப்பதிவில் ஆங்கில வார்த்தையான Pariah என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார். இந்த […]
Continue reading …