இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை முறைப்படி பிரதமரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான மோடி மரியாதையுடன் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கொடுத்த மரியாதை கொடுத்து காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் தொடர்ந்து மூன்று தேர்தல்களாக […]
Continue reading …அண்ணாமலை, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முன்னாள் எஸ்பிக்கு விடுத்த மிரட்டல் தான் காரணம் என்றும், அவர் விருப்ப ஓய்வில் சென்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மோகன்ராஜ். அவர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளதால் நீதியரசர் சந்துரு அறிக்கையை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளார். அண்ணாமலை, “பள்ளிக்கூடத்தில் சாதி இருக்க கூடாது என்பதில், பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது, பள்ளி அளவில் மாணவர் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை” என்று தெரிவித்துள்ளார். நீதியரசர் சந்துரு, அரசுப் பள்ளிகளின் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் முன்னாள் புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அமித்ஷா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அழைத்து கண்டித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆந்திராவிலிருந்து சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் இது குறித்து விளக்கமளித்த போது, […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் […]
Continue reading …ஆளுநர் மாளிகை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி அளிக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணை சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து […]
Continue reading …‘ரத்னம்’ திரைப்படம் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களையும் மோசமான வசூலையும் பெற்றுள்ளது. இதனால் விஷால் கேரியரில் மிக மோசமான வசூல் செய்த படமாக “ரத்னம்“ அமைந்துள்ளது. விஷால் அடுத்து “துப்பறிவாளன் 2” மற்றும் முத்தையா இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்குப்பின் விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிக்கவுள்ளதாக ஒரு […]
Continue reading …பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடிகர் அஜீத் குமார் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அஜீத்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் நடிகர் அஜீத்தின் “தீனா” உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். நடிகர் அஜீத்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், […]
Continue reading …பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சார அனுமதி முடிந்த நிலையிலும் போன் மூலமாக பேசி ஓட்டு கேட்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். நாளை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 6 மணியுடன் அனைத்து விதமான பிரச்சாரங்களையும் நிறுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை, […]
Continue reading …