பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை சமூவலைதளத்தில், “சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில், மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது, மணல் கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அதே போல, வேலூர், பொன்னையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை வீடியோ எடுத்த, முன்னாள் ராணுவ வீரர் உமாபதியை, சமூக விரோதிகள் […]
Continue reading …செங்கல்பட்டு நீதிமன்றம் அமர்பிரசாத் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அமர்பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அண்ணாமலை நடைப்பயணத்தின்போது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. […]
Continue reading …அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி தனது கணவர் மீது குண்டர் சட்டம் பாய் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமர்பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின் கீழ் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகை கவுதமி கொடுத்த புகார் ஆமை வேகத்தில் தான் போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 80, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இன்று “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்’’ என ஓர் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாம¬லை தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் திமுக துடிப்பதாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதளத்தில், “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் […]
Continue reading …உடல் நலக்குறைவால் அண்ணாமலையின் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் தொடங்குவதாகவும், அண்ணாமலையின் 3-ம் கட்ட யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’’ பாதயாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்த இந்த பாதயாத்திரை வெற்றிகரமாக 2 கட்டம் முடிவடைந்தது. ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நடைபெறும் இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும் […]
Continue reading …திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசுக்கு முழிப்பு வருமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இவ்விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுதும் சிதிலமடைந்து இருக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப் போவதாக அறிவித்த திமுக, அதன் பிறகு அது […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “பாம்பிடம் சீண்டுவது போல், ஆளுநரிடம் சீண்டினால் கொத்தத் தான் செய்வார்” என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஆளுநரைப் பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை, ஆளுநரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு. ஆளுநரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, ஆளுநர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள்? பாம்பிடம் சீண்டுவது போல், திமுக […]
Continue reading …மதுரை பாஜகவினர் “மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம்” என எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கடந்த சில நாட்களாகவே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி பேட்டியளித்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்று செல்லூர் ராஜூ கூறியதற்கு அண்ணாமலை “அரசியல் விஞ்ஞானிகள் எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி நிர்வாக மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தலைநகர் டில்லியை ஒரு மாநகராட்சி போல தரம் குறைக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றிய நாள் மக்களாட்சியின் கருப்பு நாள் என விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடியில், தலைநகர் டில்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக டெல்லி நிர்வாக மசோதா எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் தெளிவுபடுத்த […]
Continue reading …