திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தளுகை பாதர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷின் மனைவி ராணி (50). கணவன் மனைவி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக திருப்பத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ராணி பலத்த காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் […]