Home » Posts tagged with » EPS (Page 5)

ஈபிஎஸ் கனவு காண வேண்டாம்!

Comments Off on ஈபிஎஸ் கனவு காண வேண்டாம்!

இனிமேல் எடப்பாடி பழனிசாமி கனவு காண வேண்டாம். ஏனென்றால் தமிழ்நாடு இனி திமுகவின் கோட்டை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். இதுபற்றி அவர், “அதிமுகவில் உள்ள தெருச் சண்டையை மறந்து திமுக மீது எடப்பாடி பழனிசாமி பாய்கிறார். சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்றுவிட்டு சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் சட்டமன்றத்தில் அந்த மாவட்டத்தில் வென்றது போல் மற்ற மாவட்டத்தில் வென்று இருந்தால் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக […]

Continue reading …

எடப்பாடியை ஏற்றுக் கொண்ட ராமதாஸ்!

Comments Off on எடப்பாடியை ஏற்றுக் கொண்ட ராமதாஸ்!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை கூட்டணி கட்சி தலைவராக ஏற்று கொண்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்திய ராமதாஸ், “பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர், ராமதாஸ் அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Continue reading …

எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் மாற்றம்!

Comments Off on எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் மாற்றம்!

அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். இது அவரது கட்சியினரிடத்தில் மட்டுமல்லாமல் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க இருவருக்குமிடையே போட்டிகள் இருந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்தார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் […]

Continue reading …

எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!

Comments Off on எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!
எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!

தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கான பிரச்னை உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியிருப்பதாக ஈபிஎஸ் தனது மனுவில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஈபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை கோரியிருப்பதாக ஈபிஎஸ் தமது மனுவில் […]

Continue reading …

ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு!

Comments Off on ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் அந்த தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கேபி முனுசாமி அறிவித்தார். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்ளிட்ட புது தீர்மானங்கள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் 23 தீர்மானங்கள் ரத்து செய்ததாக இன்று […]

Continue reading …

எடப்பாடியாரை சந்தித்த அண்ணாமலை!

Comments Off on எடப்பாடியாரை சந்தித்த அண்ணாமலை!

அதிமுக ஒற்றைத் தலை குறித்து கட்சிக்குள்ளே நிலவி வரும் களேபரத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி உள்ளது. ஆனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது. எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேரில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். […]

Continue reading …

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

Comments Off on நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விவசாயிகளின் நலன் கருதி அவற்றை காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திறக்க வேண்டும் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஈபிஎஸ் இன்று (செப். 19) வெளியிட்ட அறிக்கை: ஏற்கெனவே எனது அறிக்கையில் தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஏரிப் பாசனம் மூலம் நெல் பயிரிட்ட மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திமுக […]

Continue reading …

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை – தமிழக அரசு உத்தரவு !

Comments Off on தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை – தமிழக அரசு உத்தரவு !
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை – தமிழக அரசு உத்தரவு !

சென்னை, ஜூன் 4 மாண்புமிகு அம்மாவின் அரசு, தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து பன்முக நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். முதல்வர் ஆணைக்கிணங்க, கொரோனா சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் […]

Continue reading …

தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி!

Comments Off on தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி!
தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி!

சென்னை, ஜூன் 1 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (1.6.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக அடிக்கல் நாட்டினார். இப்புதிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவானது 10 ஏக்கர் நிலப்பரப்பில், 5.57 லட்சம் சதுரஅடி கட்டட பரப்பளவில், 21 அடுக்குமாடிக் கட்டடமாக அமையவுள்ளது. இப்பூங்கா நவீன […]

Continue reading …

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

Comments Off on ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

சென்னை, மே 27 இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால் 26.5.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு இலங்கை மக்களுக்கும், […]

Continue reading …