
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில், “மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது. மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, […]
Continue reading …
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் “தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை, 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கையே நடந்திருக்கிறது” என்று பேட்டியளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எங்களுக்கு திருப்தி […]
Continue reading …
ரேஷன் கடை ஊழியர்களுக்கு புயல் மற்றும் வெள்ள நிவாரண தொகை ரூ.6000 வழங்குவதன் தொடர்பாக பல நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று முதல் இதற்கான டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த நெறிமுறைகள் பின்வருவமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவை & நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் […]
Continue reading …
சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழந்ததால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு தமிழக அமைச்சர் உதயநிதியிடம் திரையுலக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். சூர்யா மற்றும் கார்த்தி பத்து லட்ச ரூபாய் கொடுத்தனர். அதையடுத்து சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூபாய் 10 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்தனர். தற்போது நடிகர் சூரி தனது பங்காக அமைச்சர் உதயநிதி இடம் 10 […]
Continue reading …
பழம்பெரும் நடிகரான ரா. சங்கரன் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவை அடுத்து திரை தமிழ் திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரா சங்கரன் கடந்த 1931ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். கடந்த 1974ம் ஆண்டு “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே” என்ற படத்தில் அறிமுகமானவர், “தேன் சிந்துதே வானம்,” “தூண்டில் மீன்,” “ஆடிப்பெருக்கு,” “ஒரு கைதியின் டைரி,” “பகல் நிலவு,” “உனக்காகவே வாழ்கிறேன்,” “கடமை கண்ணியம் கட்டுப்பாடு,” “அமரன்,” […]
Continue reading …
இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஞானவேல்ராஜாவுக்கு, அண்ணன் அமீர் அவர்கள் மீது நீங்கள் தூவிய விஷ விதை விருட்சமாய் மாறி அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது என்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி.. அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக்கூடாது என்பதற்காக இக்கடிதம். இதுவரை கடந்த 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது – நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி -அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3க்கு உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் பாக்கெட் விலையை கடந்த சில மாதங்களாக உயர்த்தியுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினின் பால் பாக்கெட்டுகள் தனியார் நிறுவனங்களை விட லிட்டருக்கு ரூ.22 வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பால் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டும், அனைத்து கால்நடைகளுக்கும் அரசு இலவச காப்பீடு வழங்க வேண்டும் […]
Continue reading …
பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்பட்டவர். அவர் ஏற்கனவே சரணடைந்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார். பிரணவ் ஜுவல்லரி மீது சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்தது. தமிழ்நாடு முழுதும் அந்த கடைக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. இதில் கிலோ கணக்கில் நகை ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிதிலமடைந்த 10,000 பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். அண்ணாமலை அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளிக் கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து, ஐந்து குழந்தைகள், தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து மிகுந்த […]
Continue reading …
காங்கிரஸ், தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்பிகள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து இந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தின் கொடூரமான தன்மையைக் காட்டவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடந்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 15 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில், கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது […]
Continue reading …