Home » Posts tagged with » Netrikkan (Page 182)

சென்னை மெட்ரோ டிக்கெட் இனி போன்பேயில்!

Comments Off on சென்னை மெட்ரோ டிக்கெட் இனி போன்பேயில்!

அவ்வப்போது சில வசதிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு அறிவித்து வருகிறது. தற்போது போன்பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது. மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் ஏற்கனவே போன்பே செயலி மூலம் ரீசார்ஜ் கூப்பன் எடுக்கும் வசதி உள்ளது. இதையடுத்து தற்போது சென்னையில் போன்பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போன்பே செயலியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் கூப்பன் உள்ளதாகவும் […]

Continue reading …

பைக் வீலிங் செய்த இளைஞர் கைது!

Comments Off on பைக் வீலிங் செய்த இளைஞர் கைது!

சமீபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் பலதரப்பட்ட சாசகசங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது. தற்போது மிகவும் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் செய்தாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் […]

Continue reading …

புதிய தொழில்நுட்பம் குறித்து பிரதமர் கவலை!

Comments Off on புதிய தொழில்நுட்பம் குறித்து பிரதமர் கவலை!

புதிதாக ஏஐ தொழில் நுட்பம் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிதாக்குவதோடு, வேலைபளுவையும் குறைக்கிறது. பல புதிய விஷயங்களுக்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவரின் குரலில் பேசுவது. பாடுவது, டீப் பேக் வீடியோ, மார்பிங் புகைப்படம் என்று பல விஷங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. பிரதமர் மோடி கர்பா நடனம் ஆடுவது போன்ற போலி வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ பெரும் […]

Continue reading …

காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை!

Comments Off on காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை!

இன்று நடிகை விஜயசாந்தி சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகினார். தற்போது தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸில் இணைந்தார். தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. ‘பாரதிய ராஷ்டிரிய சமிதியிடம் […]

Continue reading …

அட்லி சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா?

Comments Off on அட்லி சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா?

இயக்குனர் அட்லி “ராஜா ராணி,” “தெறி,” “மெர்சல்” மற்றும் “பிகில்” என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்தார். அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கினார். செப்டம்பர் 7ம் தேதி 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த “ஜவான்” திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். […]

Continue reading …

ஆளுனர் குறித்த விவாதத்திற்கு சபாநாயகர் விளக்கம்!

Comments Off on ஆளுனர் குறித்த விவாதத்திற்கு சபாநாயகர் விளக்கம்!

சபாநாயகர் ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். நவம்பர் 18ம் தேதி தமிழ்நாடு சட்டசபை சிறப்பு அவசர கூட்டம் நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து அந்த மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் சபாநாயகர் அப்பாவு பேட்டியில், “ஆளுநர், குடியரசுத் தலைவர், நீதிமன்றம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் கிடையாது. தமிழக அரசு […]

Continue reading …

அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய நபர்கள்!

Comments Off on அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய நபர்கள்!

அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளரால் தாக்கிய நபர்கள் பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நேற்றிரவு அம்பாசமுத்திரம் அருகே வீரவ நல்லூரியில் கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பேருந்தை சிலர் வழிமறித்துள்ளனர். ஓட்டுனர் ரெஜின் சிறிது தூரம் தள்ளி பேருந்தை நிறுத்தியுள்ளர் என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த நபர்கள் ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றி, அவர்கள் ஓட்டுனர் ரெஜினை அரிவாளார் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை […]

Continue reading …

பலராமனை காவலில் எடுத்த காவல்துறை!

Comments Off on பலராமனை காவலில் எடுத்த காவல்துறை!

பலராமன் என்பவர் கௌதமி அளித்த நில மோசடி புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தற்போது ஒரு நாள் போலீஸ் காவலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். அவர் தனது குடும்ப நண்பராக இருந்த அழகப்பன் என்பவர் தன்னுடைய சொத்துக்களை மோசடி செய்ததாக புகாரளித்திருந்தார். இப்புகார் குறித்து தனக்கு பாஜக எந்தவித உதவியும் செய்யவில்லை என்பதால் அவர் கட்சியில் இருந்து […]

Continue reading …

புதிய புயலின் ‘மிதிலி’!

Comments Off on புதிய புயலின் ‘மிதிலி’!

புதிதாக வங்க கடலில் உருவாகி வலுவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் என்ன பெயர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி இது புயலாக உருவானால் […]

Continue reading …

யானைகள் விரட்டும் பணி தீவிரம்!

Comments Off on யானைகள் விரட்டும் பணி தீவிரம்!

யானைகள் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீத்திபாளையம் பகுதியில் வந்த யானை கூட்டம், உணவுக்காக தக்காளி, வாழை மற்றும் ரேஷன் கடைகளிலிருந்து அரிசி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு சென்றுவிட்டது. யானைகள் மீண்டும் இரவு வனத்திலிருந்து வெளியே வந்துள்ளது. நள்ளிரவு அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் அருகாமையில் உள்ள தோட்டங்களுக்குள் உலா வந்து கிராமப் பகுதிகளுக்கும் சென்றுள்ளது. அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு […]

Continue reading …