
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகிற மசோதாவை அப்படியே ஏற்று கையெழுத்து போடுவதற்கு ஆளுநர் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் இல்லை, மசோதாக்களின் சாதக பாதங்களை ஆராய்வது தான் ஆளுநரின் கடமை. ஒரு மசோதா வந்ததும், அதற்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. மசோதாவை திருப்பி அனுப்பினால், பாஜககாரர் போல் செயல்படுவதாக முத்திரை குத்துகின்றனர். வருகிற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் […]
Continue reading …
கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. தற்போது பணையக்கைதிகளை விடுவித்துள்ளது ஹமாஸ் அமைப்பு. கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஹமாஸின் ஆதிக்கத்திலுள்ள காஸா முனை மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் காஸாவில் உள்ள தேவாலயம் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகளவில் கண்டனங்களை பெற்றது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் அழைத்து […]
Continue reading …
அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி தனது கணவர் மீது குண்டர் சட்டம் பாய் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமர்பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின் கீழ் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும், ஆளுநர் மாளிகைக்கு வெளியே தெருவில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இன்று தேவர் ஜெயந்தி குருபூஜை விழா மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “ஆளுநர் மாளிகையில் இருந்து பொய் தகவல் பரப்பப்படுகிறது, ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி வருகிறது. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியது திமுக அரசுதான்” […]
Continue reading …
காவல் நிலையத்தில் நபர் ஒருவர் கேரளாவில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் ஒன்றில் 3 டிபன் பாக்ஸ் வெடிக்குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேரும், படுகாயங்களுடன் 20க்கும் மேற்பட்டோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரள மாநிலம் முழுவதும் தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு […]
Continue reading …
சசிகலா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக வந்தபோது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், பாஜக கூட்டணியில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு: தேர்தல் சமயத்தில் தான் எந்த கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தெரியும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பாஜக நாடகமா என்றால், எனக்கு அப்படி தெரியவில்லை. அதுதான் முகப்பு வாயில் அந்த இடத்தில் காவலர்கள் […]
Continue reading …
பொன்.மாணிக்கவேல் “ஆட்சியாளர்கள் இந்து கோவிலுக்குள் வருவதில்லை, ஆனால் இந்து கோவில்களின் சொத்துக்களை ஆள நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார். சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும், முன்னாள் ஐ.ஜியுமான பொன்.மாணிக்கவேல் சென்றுள்ளார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, சட்டைநாதர்சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர் உமாமகேஸ்வரிஅம்மன், சட்டநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர், திருநிலைநாயகி அம்மன் சுவாமி சந்நிதிகளில் […]
Continue reading …
கருக்கா வினோத் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக ஆளுநர் ரவி தங்கி இருக்கும் கவர்னர் மாளிகைக்கு முன்பு கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் குண்டு வீசியதற்காக கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை செய்வதில் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய காவலர்கள் அவரை அழைத்து […]
Continue reading …
நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக முதலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக கருத்துவேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து விலகியது. இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த னாளை முன்னிட்டு அதிமுக பொ., செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பாரத பிரதமர் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தன் வலைதள பக்கத்தில், “எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் என்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்து பிரதமர் வேட்பாளர் யார் என்கிற […]
Continue reading …
சமீபத்தில் வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து படம் “லியோ.” இந்த படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான ஒரு வாரத்திலேயே 461+ கோடிகளை வசூலித்து ஹிட் அடித்துள்ளது. ஆனால் தற்போது விடுமுறை நாட்கள் முடிந்துள்ளதால் கலெக்ஷன் குறைய ஆரம்பித்துள்ளது. படத்தின் வசூலை பெருக்கும் வகையில் வெற்றிவிழாவை நவம்பர் 1ம் தேதி கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். […]
Continue reading …