Home » Posts tagged with » Netrikkan (Page 213)

அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி

Comments Off on அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் கல்லூரி வளாகத்தில் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னை, வேளச்சேரியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டனி, எக்கனாமிக்ஸ் படிக்கும் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில், “சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- […]

Continue reading …

கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் உத்தரவு

Comments Off on கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் உத்தரவு

வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டால் அதற்-கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கேரள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்திரவிட்டுள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் மோசடி செய்து பணம் எடுத்து வருவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கேரளாவில் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. […]

Continue reading …

லடாக் பகுதியில் ராகுல் காந்தி பைக் சவாரி!

Comments Off on லடாக் பகுதியில் ராகுல் காந்தி பைக் சவாரி!

இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். அங்கு அவர் பைக்கில் பயணம் செய்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். லே என்ற பகுதியிலிருந்து பேங்காங் என்ற ஏரி பகுதிக்கு பைக்கில் சவாரி மேற்கொண்டார். பேங்காங் ஏரியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. […]

Continue reading …

இளம்பெண்ணை கண்காணித்தவர் கைது!

Comments Off on இளம்பெண்ணை கண்காணித்தவர் கைது!

கோவையை சேர்ந்த துப்பறியும் உரிமையாளர் இரண்டு பேர் இளம் பெண்ணை தொடர்ந்து கண்காணித்து பின் தொடர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது அப்பெண்ணின் கணவரே இளம் பெண்ணின் மீது சந்தேகப்பட்டு துப்பறிய செய்ததாக தெரியவந்துள்ளது. துப்பறியும் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தற்போது வளர்ந்து வருகிறது. திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது திருமணம் செய்ய போகும் பெண்ணை கண்காணிப்பது, திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளையை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை துப்பறியும் நிபுணர்கள் செய்து தருவார்கள். அந்த […]

Continue reading …

விரலை வெட்டி அமைச்சருக்கு பரிசாக அனுப்பிய நபர்!

Comments Off on விரலை வெட்டி அமைச்சருக்கு பரிசாக அனுப்பிய நபர்!

மாநில உள்துறை அமைச்சருக்கு மஹாராஷ்டிரம் மாநிலம் மும்பையைச் சேர்ந்த தனஞ்செய் என்பவர் தன் ஒரு விரலை வெட்டி அனுப்பியுள்ளார். முதலமைச்சர் ஏக்நத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி மஹாராஷ்டிரம் மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள மும்பை உல்ஹாஸ் நகரில் நந்தகுமார் தன் குடும்பத்துடன் முகாம் எண் 4. உள்ள அஷாலேபாடா பகுதியில் வசித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் தன் மனைவியுடன் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். நந்தகுமார் […]

Continue reading …

அயோத்திக்குச் செல்லும் ரஜினிகாந்த்

Comments Off on அயோத்திக்குச் செல்லும் ரஜினிகாந்த்

நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக ரஜினிகாந்த் செல்லவுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. “ஜெயிலர்” திரைப்படம் கடந்த வாரம் வியாழனன்று வெளியானது. ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. சென்னை, பிரசாத் லேப்பில் […]

Continue reading …

‘ஜெயிலர்’ படத்தை தடை விதிக்க கட்சி தலைவர் மனு!

Comments Off on ‘ஜெயிலர்’ படத்தை தடை விதிக்க கட்சி தலைவர் மனு!

அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியது தவறு என்று தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் […]

Continue reading …

“ஜெயிலர்” பட நடிகர் நீதிமன்றத்தில் ஆஜரா உத்தரவு

Comments Off on “ஜெயிலர்” பட நடிகர் நீதிமன்றத்தில் ஆஜரா உத்தரவு

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2012ம் ஆண்டு வருமானதுறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், மோகன்லால் வீட்டிலிருந்து 2 யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமான யானை தந்தங்களை வீட்டில் பதுக்கி வைத்ததற்காக நடிகர் மோகன்லால் மீது வழக்குப் பதிவு […]

Continue reading …

குழந்தைகளை கொன்ற நர்ஸ்

Comments Off on குழந்தைகளை கொன்ற நர்ஸ்

இங்கிலாந்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் பச்சிளங்குழதைகள் நர்ஸ் மூலமாக கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் கவுண்ட்ஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரபலமான இம்மருத்துவமனையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜுன் வரையிலான காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்திற்கும் அதிகமாக உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் இறப்பில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது நடந்து வந்தன. இதுதொடர்பாக […]

Continue reading …

மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

Comments Off on மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

வரும் 20ம் தேதி திமுக இளைஞரணி தரப்பிலிருந்து தமிழகம் முழுதும் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. மதுரையில் மட்டும் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக சமீபத்தில் மாணவன் மற்றும் அவருடைய தந்தை இறந்ததையடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப் போவதாக திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி அறிவித்தது. அதே 20ம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதால் அதிமுக இதற்கு கண்டனம் தெரிவித்தது. பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால் ஜனநாயகத்தை கருத்தில் […]

Continue reading …