
தெலுங்கானா அரசாங்கம் 800 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தைப் பாதுகாக்க, ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று தெலுங்கானா மாநிலத்திலுள்ள மெஹ்பூப் என்ற நகரில் உள்ளது. இந்த ஆலமரம் சிதிலமடைந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இதுகுறித்து அரசு ஆய்வு செய்து தற்போது இந்த மரத்தை பாதுகாக்க ரூபாய் 2 கோடி […]
Continue reading …
இன்போசிஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தியது. இதனை பயன்படுத்தி ஊழியர்கள் பகலில் ஒரு நிறுவனத்திற்கு வேலை இரவில் ஒரு நிறுவனத்திற்கு வேலை என ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகார்கள் வந்தவுடன் இன்போசிஸ் நிறுவனம் தற்போது தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டில் […]
Continue reading …
காலம் காலமாக ரயில்கள் புறப்படும் நேரம் தாமதமாக புறப்படுவது நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ரயில்கள் தாமதமாக புறப்பட்டால் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராஜ்தானி சதாப்தி மற்றும் தூரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டு பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்ற ரயில்வே விதிகளில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவசமாக வழங்கப்படும் உணவு சிற்றுண்டியா அல்லது மதிய உணவா என்பதை பயணிகள் […]
Continue reading …
டிஎன்பிஎஸ்சி தலைமைச் செயலகத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பை பற்றிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என்றும் இன்று முதல் வரும் அக்டோபர் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களாக பணியாற்ற விரும்பும் நபர்கள் […]
Continue reading …
நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் “கடம்பூர் மாளிகை வேணாம்.. தஞ்சை புறப்பட்ட ஆதித்த கரிகாலர்!” என்று பதிவிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெய்ராம் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இம்மாதம் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த பாதயாத்திரை கூட்டத்தில் புகுந்த பிக்பாக்கெட்டுகளின் கைவரிசையால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது கேரளாவில் இந்த ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை சென்ற பகுதியில் பிக்பாக்கெட் சம்பவங்கள் அதிகமாக உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றம் நடந்த இடங்களில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் 4 பேர் கொண்ட கும்பல் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்கள் […]
Continue reading …
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தயாராகி வருவதாக கூறியுள்ளார். சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு சிறந்த படங்களை திரையரங்குகளுக்கு எடுத்து வருவதில் சிறந்தவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜதமவுலி. “பாகுபலி 1 & 2” மற்றும் அவரது சமீபத்தய படைப்பான “ஆர்ஆர்ஆர்” ஒரு பிளாக்பஸ்டராக இருந்தாலும், இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்ற தயாராகி வருவதாக அவர் கூறியுள்ளார். சமீபத்தில், எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தைப் பற்றிய பரபரப்பான விவரங்களை கூறியுள்ளார். படத்தின் […]
Continue reading …
அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் இன்று காலை முதல் தொடர்ந்து 8 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் இருவரது வீடுகளுக்கு முன்னால் கூடி போராட்டம் செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் சோதனை செய்து பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 8 மணி […]
Continue reading …
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா அமைப்பு கோகினூர் வைரத்தை உரிமை கோரியுள்ளது. 1850ல் இந்தியாவின் அரிய பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அரிய வகை வைரமான இது ஆண் அரசர்களுக்கு கெடுதல்களை விளைவிக்கும் சக்தி கொண்டது என நம்பப்பட்டதால் பெண்ணரசிகள் அணியும்படி மகாராணியின் கிரீடத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகாலமாக ராணி எலிசபெத் கிரீடத்தை அலங்கரித்த பல ஆண்டுகளாக இந்தியாவின் சொத்தான கோஹினூர் வைரத்தை இந்தியாவிற்கே திரும்ப அளிக்க வேண்டும் […]
Continue reading …
அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும அறிவியல் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு புதிய திட்டம் என்னென்ன என்பதை அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்களும், அதன் கீழ் பல கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவை தவிர்த்து தன்னாட்சி பெற்ற பல்கலைகழகங்களும் செயல்படுகின்றன. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின் ஏராளமான மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்தனர். மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. […]
Continue reading …