
‘தங்கலான்’ திரைப்படம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவருகிறது. திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் ஜூலை மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் “அட்டகத்தி” தினேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆர்யா, பா. […]
Continue reading …
மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அஜீத் இப்போது நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இத்திரைப்படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்தது. தற்போது இப்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜீத், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட முன்பாகவே தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றவர். திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் போட்டியிட்டார். அவர் சுமார் 8 லட்சம் வாக்குகள் அதாவது 796956 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பாலகணபதி பெற்ற வாக்குகள் 224801 என்பது தேமுதிக நல்ல தம்பி பெற்ற வாக்குகள் 223904 என்பதும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் […]
Continue reading …
‘விடுதலை” பாகம் 1ல் ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். தற்போது ‘வெப்பன்’ திரைப்படத்தில் இன்னுமொரு அசரடிக்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “இயக்குநர் குகன் இக்கதையை என்னிடம் சொன்னபோது […]
Continue reading …
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வியடைந்தார். திமுக தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் பொது மக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கினர். குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பாஜக இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது. அண்ணாமலை என்ற ஆட்டை வெட்டி பிரியாணி போடுவோம் என திமுகவினர் தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக […]
Continue reading …
ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஏற்கனவே பல ஆண்டுகால நண்பர்கள். சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துக்கு சந்திரபாபு நாயுடு நன்றி என கூறியிருந்தார். பாஜக கூட்டணி 293 தொகுதிகள் பெற்றிருந்தாலும் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பதும் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலையில் […]
Continue reading …
கரும்பு விவசாயி சின்னம் சீமானின் நாம் தமிழர் கட்சி மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறாததால்தான் அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து மைக் சின்னத்தில் தான் அக்கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தாலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டு 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. பொது தேர்தலில் […]
Continue reading …
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி-யிடம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் டி ஆர் பி ராஜா உடனிருந்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஜி.சி.டி.கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம், “கோவை தொகுதியில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாப்பதும் நமதே என வெற்றி பெற்றுள்ளோம். கோவை மண்ணில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பாராளுமன்ற உறுப்பினரை தந்துள்ளனர். திமுக கோவையை […]
Continue reading …
விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தந்தை மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்ணனை 1,37,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் வெற்றிகண்டார். மக்களவை தேர்தலில் விஜய் வசந்த் இரண்டாவது முறையாக இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 1,80,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மக்களால் மீண்டும் மக்களவை உறுப்பினராக ஆன விஜய் வசந்த் அவரது தாயார் தமிழ் செல்வியுடன், அகஸ்தீசுவரத்தில் உள்ள தந்தையின் […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த மே 13ம் தேதி ஆந்திர மாநில சட்டமன்றத்தின் 175 தொகுதிகளுக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலோடு சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார். […]
Continue reading …