
டீக்கடைக்காரரின் மகள் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆகிறார். டீக்கடைக்காரரின் மகள் பவானியா என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வடவாளம் ஊராட்சியைச் சேர்ந்தவர். சமீபத்தில் குரூப் 1 தேர்வு எழுதினார். இவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமலேயே தானாகவே முயற்சி செய்து நூலகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்ததாக கூறியுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளதாக […]
Continue reading …
மதுரையில் மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் காமராஜர் சாலையிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது மருத்துவர் பரிந்துரை சீட்டில்லாமல் மாணவர்களுக்கு மாத்திரை வினியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருந்துக்கடை உரிமையாளர் தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு […]
Continue reading …
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற சிஎஸ்கே அணியில் முன்னாள் வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா என்பதும், அவர் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவம் செய்துள்ளது. […]
Continue reading …
ஓபிஎஸ் தரப்பில் நீதிபதியிடன் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு ஓபிஎஸ் சார்பில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைமை நீதிபதிக்கும் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெறுங்கள் என நீதிபதி கிருஷ்ணன் ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்த இதையடுத்து ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டு அந்த மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் […]
Continue reading …
ஹிப் ஆப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படத்தில் அறிமுகமானவர் ஆத்மிகா. இவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து வைரலாகி உள்ளது. ஆத்மிகா “மீசைய முறுக்கு” திரைப்படம் அவருக்கு போதுமான அளவுக்கு கவனம் பெற்றுத் தரவில்லை. அடுத்தடுத்து வாய்ப்புகள் பெரியளவில் அமையவில்லை. தற்போது “காட்டேரி” படத்தில் நடித்துள்ளார். அப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சமீபத்தில் அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அப்பதிவில், “அதிர்ஷ்டசாலிகள் எளிதாக ஏணியில் ஏறி மேலே சென்றுவிடுகிறார்கள். மற்றவர்கள் பாத்துக்கொள்ளலாம்” என […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலுமில்லை என்று கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக அவருடைய விமர்சனம் கடும் தாக்குதலாக உள்ளது. இந்நிலையில் இன்று அவருடைய விமர்சனம் மத்திய நிதியமைச்சர் மீது திரும்பியுள்ளது. இதுபற்றி அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலுமில்லை. […]
Continue reading …
புதுச்சேரியைச் சேர்ந்த நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனரை வைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர். அஜீத்தின் ரசிகர்கள் அவரது 30 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடி வருகின்றனர். இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்காக உள்ள ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் படம் வெளியீட்டின்போது பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். தனது ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்து விட்ட போதிலும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார் அஜீத்குமார். நேற்று அஜீத்குமாரின் 30 ஆண்டு கால திரையுலக பயணம் கொண்டாடப்பட்டது. அஜீத் ரசிகர்கள் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த முன்னணி நடிகர் தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியடைந்ததால் தனது சம்பளத்தை பாதியாக குறைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியில் சூப்பர் ஸ்டாராக பல படங்களில் நடித்தவர் அக்ஷய் குமார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி, வசூலை குவித்தன. இதனால் இவரது கிராப் எகிறியதுடன் சம்பளமும் அதிகரித்தது. மூன்று கான் நடிகர்களுக்கு இணையாகச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த அக்ஷய்குமாரின் கடைசி ஹிட் படம் “லட்சுமி […]
Continue reading …
இந்தி நடிகரான ரன்வீர்சிங் சமீபத்தில் நிர்வாண போட்டோஷூட் செய்ததது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் மறுபடியும் அவரை நிர்வாண போஸ் தரும்படி பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தீபிகா படுகோனின் கணவரான ரன்வீர்சிங் கடந்த சில நாட்கள் முன்னதாக நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் தேசிய அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் அவர் ஆடையின்றி போஸ் கொடுத்ததை விமர்சித்தனர். தற்போது பிரபல விலங்குகள் நல அமைப்பான பீட்டா தங்களது விளம்பரத்தில் ஆடையின்றி நிர்வாணமாக போஸ் தருமாறு ரன்வீர்சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது. […]
Continue reading …
தனியார் பேருந்து மற்றும் கார் திருப்பூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கொடுவாய் அருகேயுள்ள காக்கா பள்ளத்திலிருந்து திருப்பூர் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் எதிர்ப்புறம் ஒரு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]
Continue reading …