
“மைடியர் பூதம்” படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “மைடியர் பூதம்.” இப்படத்தின் ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “எனக்கு மட்டும் ஏன் ஏன்” என்ற பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி உள்ளது. டி இமான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் உருவான […]
Continue reading …
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 169 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை நாளை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை காலை 11 மணிக்கு முக்கி அப்டேட் ஒன்றை வெளியிட போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தின் அப்டேட்தான் நாளை வெளிவரும் என்றும் குறிப்பாக சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. […]
Continue reading …
தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்வு முடிவுகளின் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நாளை (ஜூன் 17)ம் தேதியும், 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதியும் வெளியாகுமென அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது 10ம்வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு […]
Continue reading …
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்வதுதான் ஆயுதமாகும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பெரும்பாலானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. நேற்றைய கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க […]
Continue reading …
குறுகிய ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் சேவை செய்ய “அக்னிபாத்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் பணிபுரிய தீரமிக்க வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ராணுவத்திற்கு பொதுவாகவே பணிபுரிய செல்பவர்கள் குறுகிய காலமாக 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும் வரையிலும் பணிபுரியலாம் என்ற நடைமுறை தான் உள்ளது. ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு “அக்னிபாத்” என்ற குறுகிய கால 4 ஆண்டுகள் […]
Continue reading …
நண்பர்கள் இணைந்து பப்ஜி விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் கத்தி குத்து சம்பவம் நடந்தேறி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பகுதியில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த அஜித்குமார் என்பவரை சசிக்குமார் அனாதை என்று திட்டியதால், ஆத்திரமடைந்த அஜித் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். சசிக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
Continue reading …
ஐடிபிஐ வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பிப்பதற்கான கட்டணம் மற்றும் ஏனைய தகவல்கள் வெளியாகியுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.100, எஸ், எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் நடக்கும் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்பு மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு எழுத செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பம் அனுப்ப ஜூன் 17ம் தேதி கடைசி நாளாகும்.
Continue reading …
ஈரோட்டில் திடீரென வானத்தில் கேட்ட பயங்கர வெடி சத்தமும், அதை தொடர்ந்து புகை மூட்டமும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை ஈரோடு மாவட்டம், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பயங்கரமான வெடிசத்தம் கேட்டுள்ளது. வெடிசத்தத்தை கேட்ட அடுத்த சில மணித்துளிகளிலேயே வீட்டின் கூரைகள் வேகமாக அதிரத் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் பதறிய வண்ணம் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் வானில் வட்ட வடிவிலான புகை மூட்டமும் ஏற்பட்டுள்ளது. […]
Continue reading …
தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா அளித்த பேட்டியில் நாங்கதான் உண்மையான எதிர்க்கட்சி என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது திமுக கட்சி ஆளும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி எது என்ற குழப்பம் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் நீடித்த வண்ணம் உள்ளது. அதிமுக கட்சியில் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள்தான் உண்மையான எதிர்கட்சி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்கள் தேவையின் அடிப்படையில் நாங்கள் […]
Continue reading …
சென்னை மாநகராட்சி பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு உயர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாணவ மாணவிகளுக்கு […]
Continue reading …