
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் வேலையில் முனைப்புடன் இருக்கிறார் நெல்சன். சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி 169 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் “பீஸ்ட்” திரைப்படம் ரிலீசுக்கு பிறகு கதை கலந்துரையாடலின் போது, நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கைவில்லை என கூறப்படுகிறது. ரஜினி 169 படத்தில் அவரது இளமைக் […]
Continue reading …
நடிகர் தனுஷ் நடிக்கும் “தி கிரே மேன்’’ திரைப்படத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “தி கிரே மேன்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர். அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்குகின்ற திரைப்படம். இப்படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னரே கூறியிருந்தார். அதில் “இப்படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் […]
Continue reading …
திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்குவதற்கான பணி நடந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியின்படி குடும்பத்தலைவிகளுக்கு எப்போது மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்க்கப்படும் என்ற கேளவிகள் எழுந்த நிலையில், இதுகுறித்த தகவலை நிதியமைச்சர் பழனிவேல் தெரிவித்துள்ளார். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் தோறும் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு […]
Continue reading …
கோழி வளர்ப்பு நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது கேரள மாநிலத்தில் உள்ள ஒருவரது கோழி. இந்த அதிசய கோழி கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியைச் சேர்ந்த பிஜு என்பவருடையது. இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேல் தீஸ்-380 வகையைச் சேர்ந்த கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளார். அதில் சின்னு என பெயரிடப்பட்டுள்ள ஒரு கோழி காலை சுமார் 8.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை 24 முட்டைகளை போட்டுள்ளது. […]
Continue reading …
உலக நாயகன் கமலஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இருக்கும் பட்சத்தில் ரத்தம் தேவைப்படுவோர் அணுக வேண்டிய எண்ணை அறிவித்துள்ளார். இதுபற்றிய ஓர் அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் “எனது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் நற்பணி இயக்க நண்பர்கள் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். குறிப்பாக கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி எண்ணற்ற உயிர்களை காத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதிலும் […]
Continue reading …
மத்திய அமைச்சரவையில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த ஏலத்திற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. குறைந்த விலையில் அதிக விலை வரையிலான ஸ்மார்ட் போன்களை 4ஜி தொழில்நுட்பத்தில் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. ஆன்லைன் சந்தைகளில் 5ஜி தொழில்நுட்பத்துடன் ஸ்மார்போன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) […]
Continue reading …
குறுகிய ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் சேவை செய்ய “அக்னிபாத்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் பணிபுரிய தீரமிக்க வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ராணுவத்திற்கு பொதுவாகவே பணிபுரிய செல்பவர்கள் குறுகிய காலமாக 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும் வரையிலும் பணிபுரியலாம் என்ற நடைமுறை தான் உள்ளது. ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு “அக்னிபாத்” என்ற குறுகிய கால 4 ஆண்டுகள் […]
Continue reading …
எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தியை விசாரிக்கக்கூடாது என்று கூறி போராட்டம் செய்தததால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் கடந்த இரண்டு நாட்களாக நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று 8.30 மணி நேரம் நடத்திய விசாரணை இன்றும் தொடர்ந்துள்ளது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் பலத்த காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியை விசாரிப்பதை எதிர்த்து எம்.பி. […]
Continue reading …
திண்டுக்கல் சீனிவாசன் வெளிப்படையாக தன் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான் என்று கூறியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவரை அதிமுக ஒற்றை தலைமையில் செயல்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு சசிகலா அந்த பதவியை ஏற்றாலும் பின்னர் அவர் சிறை சென்றார். அதன்பின் கட்சிக்கு பொதுச்செயலாளர் இல்லாமல் ஈபிஎஸ் […]
Continue reading …
கல்வித்துறை நடத்திய ஆய்வில் கொரோனா நொய் தொற்று காலத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக அளித்துள்ள தகவல் அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு நீடித்து வருகிறது. கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கடும் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த சமயம் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளும் முழுவதுமாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் […]
Continue reading …