Home » Posts tagged with » Netrikkan (Page 539)

“இன்று நேற்று நாளை” பட இயக்குனருடன் இணையும் சூர்யா!

Comments Off on “இன்று நேற்று நாளை” பட இயக்குனருடன் இணையும் சூர்யா!

பிரபல இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று,” “ஜெய்பீம்,” “எதற்கும் துணிந்தவன்” உட்பட பல படங்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, இவர் தயாரிப்பில் “சூரரைப் போற்று” படம் இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் ரீமேக் ஆகிறது. பாலா இயக்கி வரும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் மீனவர் பிரச்சனையை மையமாக வைத்து எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் […]

Continue reading …

ரம்ஜான் பண்டிகை தினப்பரிசு வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ.

Comments Off on ரம்ஜான் பண்டிகை தினப்பரிசு வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ.

வருகிற 3ம் தேதி அன்று முஸ்லிம் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாட காத்திருக்கின்றனர். இதன் காரணமாக ரம்ஜான் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின். “என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் தொகுதி மக்களுக்கு ரம்ஜான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கினேன்” என்று கூறியுள்ளார் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி. இது குறித்து அவர் கூறும்போது, “என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் சேப்பாக்கம் […]

Continue reading …

நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Comments Off on நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் 40 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று பல திட்டங்கள் அறிவித்து வருகின்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேனி மாவட்டத்தில் ரூ.114.21 கோடியில் 40 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ஊஞ்சப்பட்டியில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Continue reading …

செயலி மூலம் சூதாட்ட விளையாட்டு, சென்னை ஐடி ஊழியர் தற்கொலை!

Comments Off on செயலி மூலம் சூதாட்ட விளையாட்டு, சென்னை ஐடி ஊழியர் தற்கொலை!

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் ஐடி ஊழியராக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திடீரென அவருக்கு வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார். அதன்பிறகு மதுவிக்கு அடிமையான இவர், கிரெடிட் கார்டு மூலம் அளவுக்கு மீறி கடனை வாங்கி ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடியதாக தெரிகிறது. அதில் சுமார் 35 லட்சத்தை அவர் இழந்துள்ளாராம். இதனை அடுத்து கடனை செலுத்த கோரி வங்கியில் இருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு தூக்கில் […]

Continue reading …

சிவகார்த்திகேயன் பட பாடல் ரிலீஸ்

Comments Off on சிவகார்த்திகேயன் பட பாடல் ரிலீஸ்

“டான்” திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வரும் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்- மற்றும் பிரியங்கா மோகன், எஸ். ஜே.சூர்யா, சூரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அனிருத் […]

Continue reading …

சென்னை ஐஐடியில் கொரோனா எண்ணிக்கை மேலும் உயர்வு!

Comments Off on சென்னை ஐஐடியில் கொரோனா எண்ணிக்கை மேலும் உயர்வு!

இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஐஐடி வளாகத்தில் உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில் சமீப காலமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி வளாகத்தில் புதிதாக இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் ஐஐடியில் கொரோனா […]

Continue reading …

முதலமைச்சர் நிவாரணம்

Comments Off on முதலமைச்சர் நிவாரணம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகையில் நடைபெற்ற சப்பரத் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் அறிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருச்செங்காட்டாங்குடியில் நடந்த சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாகை மாவட்டம் உத்திராபதீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி தீபராஜன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவரின் குடும்பத்திற்கு ரூ. 5 […]

Continue reading …

தமிழக அரசு தொடர்ந்து 4 நாட்கள் விடுதுறை அறிவிப்பு

Comments Off on தமிழக அரசு தொடர்ந்து 4 நாட்கள் விடுதுறை அறிவிப்பு

மே மாதம் தொடர்ந்து பண்டிகை தினங்கள் வருவதையொட்டி தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆம். மே 1ம் தேதி உழைப்பாளர் தினம், மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை இவை இரண்டையும் கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இடையில் மே 2ம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் […]

Continue reading …

தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்!

Comments Off on தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்!

தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் […]

Continue reading …

கடுமையான அனல் காற்று வீசும்

Comments Off on கடுமையான அனல் காற்று வீசும்

கடுமையான அனல் காற்று வரும் ஐந்து நாட்களுக்கு வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி தமிழகத்தில் நேற்று எட்டு நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் தாக்கம் இருந்ததாக தெரிகிறது. அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருச்சியில் 104 டிகிரியும், கரூரில் 103 டிகிரியும் வெயில் கொளுத்தியது. மே மாதம் நான்காம் தேதி அக்னி […]

Continue reading …