Home » Posts tagged with » Netrikkan (Page 63)

டி இமானுடன் முதல் முறை இணைந்த மனோ!

Comments Off on டி இமானுடன் முதல் முறை இணைந்த மனோ!

இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள ‘லெவன்’ திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார். இதுகுறித்து மனோ கூறும்போது, “இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்” என்றார். இது குறித்து டி இமான் கூறும்போது, “மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக […]

Continue reading …

சென்னை வானிலை மையம் தகவல்!

Comments Off on சென்னை வானிலை மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் […]

Continue reading …

பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஐடியா!

Comments Off on பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஐடியா!

தங்கள் பயனாளிகளுக்கு 5ஜி சேவையை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. ஆனால் இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்கு 3ஜி சேவை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான பயனாளிகள் அதிலிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் பயனாளிகளை தக்க வைத்துக்கொள்ள வோடபோன் ஐடியாவுடன் பிஎஸ்என்எல் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இதன் மூலம் பிஎஸ்என்எல் பயனாளிகளுக்கு நேரடியாக 5ஜி சேவையை வழங்கலாம் என்றும் ஐடியா கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜியோ […]

Continue reading …

அபராதத்துடன் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி!

Comments Off on அபராதத்துடன் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி!

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களுடன் உரையாட அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமீபத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படும் மனு நீதிமன்றத்தில் விசாரணைகள் உள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே […]

Continue reading …

செல்வப்பெருந்தகைக்கு தமிழிசை கேள்வி!

Comments Off on செல்வப்பெருந்தகைக்கு தமிழிசை கேள்வி!

முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தமிழிசை வெளியிட்ட அறிக்கையில், “கருணாநிதி நினைவிடத்தை பராமரிக்கிறார்கள். ஆனால் காமராஜர் நினைவிடத்தை பராமரிக்காமல் வைத்துள்ளனர் என்று கடந்த ஏப்ரல் 11, 2024-ம் தேதி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தேன். ஏப்ரல் -11, 2024-ம் தேதியன்று தென்சென்னை மக்களவைத் […]

Continue reading …

மாயாவதி உத்தரவால் பரபரப்பு!

Comments Off on மாயாவதி உத்தரவால் பரபரப்பு!

மாயாவதி உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னால் முதலமைச்சரும், பகுஜன் சமாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் கடந்த ஐந்து மாதத்திற்கு முன் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். ஆனால் திடீரென ஆகாஷ் ஆனந்த் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியதாக மாயாவதி உத்தரவிட்டுள்ளார். இச்செய்தி உத்தரப்பிரதேச மாநில ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து மாயாவதி அளித்துள்ள விளக்கத்தில், “ஆகாஷ் ஆனந்த் இன்னும் அரசியலில் முதிர்ச்சி அடையவில்லை. அதுவரை அவர் […]

Continue reading …

விடுதலை முழக்க மாநாட்டில், கலந்து கொண்ட வைரமுத்து!

Comments Off on விடுதலை முழக்க மாநாட்டில், கலந்து கொண்ட வைரமுத்து!

மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “இளையராஜா விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று சொல்லி விட்டேன். எம்.எஸ்.வி.யா, கண்ணதாசனா என்று கேட்டால், உடலா, உயிரா என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் எம்.எஸ்.வி.யா, கண்ணதாசனா என்கிற கேள்விக்கு பதில். எம்.எஸ்.வி. உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும், உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை […]

Continue reading …

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது; கார்த்திக் சிதம்பரம்!

Comments Off on தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது; கார்த்திக் சிதம்பரம்!

கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை, மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்தே இத்தேர்தலை எதிர்கொள்கிறோம். பாஜகவினர் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைப்பது ஜனநாயக படுகொலை. நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கொலை சம்பவத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்க கூடாது, அது தனி நபர்கள் மீது உணர்ச்சிவசப்பட்டு நடைபெறும் குற்ற சம்பவம், இதனை அரசு தடுக்க […]

Continue reading …

இயக்குனராக அறிமுகமாகும் மோகன் லால்!

Comments Off on இயக்குனராக அறிமுகமாகும் மோகன் லால்!

முதல்முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அதன்படி அவரது இயக்கத்தில் முதல் படமாக ‘பரோஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019ம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் அவ்வப்போது படப்பிடிப்பு நடந்து வந்தது. படத்தில் மோகன்லால் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் Paz Vega என்ற ஹாலிவுட் நடிகை நடித்துள்ளார். இந்த படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் சந்தோஷ் […]

Continue reading …

“அரண்மனை 4” மூன்று நாள் வசூல் இவ்வளவா?

Comments Off on “அரண்மனை 4” மூன்று நாள் வசூல் இவ்வளவா?

நகைச்சுவையோடு பேய்ப் படங்களில் தமிழில் 2014ல் வெளிவந்த “அரண்மனை” படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்குண்டு. அப்போது தொடங்கிய “அரண்மனை” வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் “அரண்மனை” படத்தின் 4ம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மே 3ம் தேதி […]

Continue reading …