Home » Posts tagged with » Netrikkan (Page 69)

ரி ரிலீசாகும் “இந்தியன்”!

Comments Off on ரி ரிலீசாகும் “இந்தியன்”!

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13ம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

Continue reading …

சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

Comments Off on சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

தென்னக ரயில்வே துறை சார்பாக சென்னையின் முக்கிய பகுதியில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 26) […]

Continue reading …

மின்சார ரயில் டிக்கெட் எடுக்க செயலி அறிமுகம்!

Comments Off on மின்சார ரயில் டிக்கெட் எடுக்க செயலி அறிமுகம்!

ஆன்லைனில் ஏற்கனவே மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மின்சார ரயிலில் பயணம் செய்யும் டிக்கெட் எடுக்கவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மின்சார ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கும் நிலை உள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தற்போது யூடிஎஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் மின்சார ரயிலுக்கான டிக்கெட்டுகளை வரிசையில் காத்திருக்காமல் எளிதில் ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து […]

Continue reading …

எங்கெல்லாம் மழை பெய்யும்?

Comments Off on எங்கெல்லாம் மழை பெய்யும்?

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்தது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் இடங்கள் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Continue reading …

விஷால் ஆவேச டுவீட்!

Comments Off on விஷால் ஆவேச டுவீட்!

நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் ரத்னம் படம் சில ஏரியாக்களில் விநியோகம் ஆகாததால் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். நடிகர் விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் ‘ரத்னம்’. இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் கடந்த வாரம் முதலாகவே படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இன்று “ரத்னம்“ திரைப்படம் வெளியாகியுள்ளது. பல திரையரங்குகளில் “ரத்னம்“ படத்திற்கு குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. “கில்லி” ரீ-ரிலீஸுக்கு அதிக திரைகள் ஒதுக்கி ரத்னத்தை ஓரம் கட்டுவதாக புகார் […]

Continue reading …

குறைந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

Comments Off on குறைந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

கோடை காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் தமிழகத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது. மேட்டூர் அணை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழே சென்றுள்ளது.அணையின் நீர்த்தேக்க பகுதியில் புராதன சின்னங்கள் வெளியே தரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் மிக வேகமாக நீரின் அளவு குறைந்து வருவதாக கவலை தரும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனால் பெங்களூரில் ஏற்பட்ட தண்ணீர் கஷ்டம் தமிழகத்திற்கு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் […]

Continue reading …

விவிபேடுகளின் நம்பகத்தன்மை குறித்த வழக்கு!

Comments Off on விவிபேடுகளின் நம்பகத்தன்மை குறித்த வழக்கு!

தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் விவிபேடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் விசாரணை […]

Continue reading …

நிர்மலாதேவி தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி!

Comments Off on நிர்மலாதேவி தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி!

இன்று நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்ற நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி மீது கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நிர்மலா தேவி […]

Continue reading …

ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது?

Comments Off on ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது?

மதுரையில் திடீரென முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் திடீரென சாலை மறியல் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இடம் பேச்சுவார்த்தை […]

Continue reading …

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Comments Off on தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

கோவை விமான நிலையத்தில் இன்று பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம், “இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்துள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக […]

Continue reading …