ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது?

Filed under: அரசியல்,தமிழகம் |

மதுரையில் திடீரென முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் திடீரென சாலை மறியல் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடும் படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆர்.பி.உதயகுமார் போராட்டத்தை கைவிட மறந்து விட்டதை அடுத்து அவரும் அவருடைய ஆதரவாளர் 200 பேரும் கைது செய்யப்பட்டனர். கேரளாவை சேர்ந்த உரத் தொழிற்சாலை இறைச்சி கழிவுகளை உரமாக மாற்றும் பணியை செய்து வருகின்றனர். அந்த தொழிற்சாலை காரணமாக சுற்றி உள்ள கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.