Home » Posts tagged with » Netrikkan (Page 74)

கலங்கிய சண்முக பாண்டியன்!

Comments Off on கலங்கிய சண்முக பாண்டியன்!

தேமுதிக வேட்பாளர் விஜய பிராபகரன் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி சிவகாசி அருகேயுள்ள அம்மையார்பட்டியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சண்முக பண்டியன் கிராம மக்களிடம் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தந்தை விஜயகாந்தை நினைத்து திடீரென கண்கலங்கினார். இதனையடுத்து கிராம மக்கள் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

Continue reading …

குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன்; டாக்டர் கிருஷ்ணசாமி!

Comments Off on குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன்; டாக்டர் கிருஷ்ணசாமி!

டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் பிரச்சாரத்தில் குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன், அந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் அளவுக்கு சீசன் இருக்கும் என்றும் கூறியுள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தில் அவர், “தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குற்றாலத்தில் பழைய குற்றாலம், தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகள் இருக்கிறது. அந்த அருவிகளில் […]

Continue reading …

தி.மு.க கூட்டணி குறித்து ஜூனியர் விகடன் சர்வே!

Comments Off on தி.மு.க கூட்டணி குறித்து ஜூனியர் விகடன் சர்வே!

ஜூனியர் விகடன் எடுத்த கருத்து கணக்கில் தமிழக மற்றும் புதுவை என 40க்கு 40 திமுக கூட்டணி தான் வெல்லும் என்று கூறப்பட்டாலும் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்றும் அதிகபட்சமாக திமுகவுக்கு 33 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜூனியர் விகடன் டீம் தமிழகம் முழுவதும் தேர்தல் நிலவரம் குறித்து கருத்துக்கணிப்பு எடுத்துள்ளது. அதில், “திமுக கூட்டணிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதிமுகவுக்கு ஒரு தொகுதி […]

Continue reading …

ராகுல் காந்தியின் திட்டம்!

Comments Off on ராகுல் காந்தியின் திட்டம்!

ராகுல் காந்தி இந்தியா கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சி கூட தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியின் சார்பில் ஒரு பொது தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் ராகுல் காந்தி இது குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் […]

Continue reading …

ஜீவா நடித்த தெலுங்கு படம் ஓடிடியில் ரிலீஸ்!

Comments Off on ஜீவா நடித்த தெலுங்கு படம் ஓடிடியில் ரிலீஸ்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் மார்க்கெட்டில் இருந்தவர் நடிகர் ஜீவா. அவர் நடித்த “கோ,” “நண்பன்,” “ஈ” உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆனால் அந்த வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அவர் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யவில்லை. இதனால் தோல்விப் படங்களாகக் கொடுத்து இப்போது தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார். அவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் “யாத்ரா 2” திரைப்படத்தில் நடித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம்!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “இப்போது விழித்துக் கொள்ளாவிட்டால் இனி எப்போதும் விழித்துக் கொள்ள முடியாது” என கூறியுள்ளார். வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது சமூகவலைத்தளத்தில், “பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் […]

Continue reading …

மம்மூட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on மம்மூட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மம்மூட்டி கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “புழு,” “கண்ணூர் ஸ்குவாட்” மற்றும் “காதல்” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன. பிப்ரவரி மாதம் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரித்த “பிரமயுகம்” படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமான படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது மம்மூட்டி மீண்டும் ஒரு மாஸ் ஆக்‌ஷன் […]

Continue reading …

குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸில் புகுந்த பாம்பு!

Comments Off on குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸில் புகுந்த பாம்பு!

பாம்பு ஒன்று குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென நுழைந்து பயணியை கடித்து விட்டது. அந்த பயணி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையிலிருந்து குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று காலை கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆறாவது பெட்டியில் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் பயணம் செய்து கொண்டிருந்தார். எர்ணாகுளம் நிலையத்தை நெருங்கிய போது திடீரென ஒரு பாம்பு அவரை கடித்துவிட்டதாக தெரிகிறது. […]

Continue reading …

ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; அன்புமணி!

Comments Off on ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; அன்புமணி!

அன்புமணி ராமதாஸ், வாக்காளர்களுக்கு ஜெகத்ரட்சகன் பணம் கொடுப்பதாகவும் அதனை தேர்தல் அதிகாரி கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனைகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து ஆட்சியரை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர், “அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தோல்வி பயம் காரணமாக திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார். தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படது குறித்து வீடியோ ஆதாரத்துடன் […]

Continue reading …

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Comments Off on நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் வாக்குப்பதிவு தவிர மற்ற அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் ஒருவேளை மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. வேட்பு […]

Continue reading …