
அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என பேசியுள்ளார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரித்து துரைமுருகன் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார், இன்று அவர் செய்தியாளர்களிடம், “நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளார்கள், பிரதமர் தமிழகத்திற்கு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக […]
Continue reading …
டில்லி நீதிமன்றம் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் காவல் ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மாதம் 15ம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கவிதவை 10 நாட்கள் காவலில் […]
Continue reading …
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. மறைந்த ஆர்.எம். வீரப்பன் அரசியல் மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் திகழ்ந்தவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 98வது வயது பிறந்தநாளை ஆர்.எம்.வீரப்பன் கொண்டாடினார். தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
Continue reading …
திடீரென்று வருமான வரித்துறையினர் கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். புதன்கிழமை காலை 11 மணியளவில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனை என்பதால் அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கும் […]
Continue reading …
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போடப்பட்ட சீல் அகற்றப்பட்டது. திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் 2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சோதனைக்கு பின்பு அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்த சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் […]
Continue reading …
வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் மாற்று கட்சியை தாக்கி, விமர்சித்து பிரசாரத்தில் பேசி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று கும்பகோணத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]
Continue reading …
வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று, விழுப்புரத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர், “பழனிசாமி பேசுவதைப்பார்த்தால் ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. என்று அந்த காமெடி நினைவுக்கு வருகிறது. பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி அவர்களே […]
Continue reading …
மர்ம நபர்கள் கிருஷ்ணகிரி அருகே எஸ்பிஐ, ஏடி.எம்.ஐ உடைத்து 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி.ஐ, ஏடிஎம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எஸ்பிஐ ஏடிஎம்மில் நேற்று மாலை வங்கி ஊழியர்கள் 16 லட்சம் ரூபாயை நிரப்பிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை கட்டிடத்தின் உரிமையாளர் வெளியில் வந்து பார்க்கும் பொழுது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கட்டிட உரிமையாளர் குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து […]
Continue reading …
பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அவருடன் 30க்கும் மேற்பட்ட பாஜகவினரும் அப்பகுதியில் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசாரும் தேர்தல் பறக்கும் படையினரும் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினர். இதனால் […]
Continue reading …
தற்போது இணையத்தில் முழுவதும் வைரலாகி உள்ள இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான “மயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல படங்கள் முழு ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தமிழ் இசை உலகில், […]
Continue reading …