கோயில் யானையை காணோம், ஆட்சியரிடம் மனு.

Filed under: தமிழகம் |

கோயில் யானையை காணோம், ஆட்சியரிடம் மனு.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள புனுகு கருப்பணசாமி கோயிலுக்கு சொந்தமான “ரெடி லெட்சுமி ” என்னும் யானையை, தனிநபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல், சிதம்பரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு விற்று விட்டதாக கூறி, நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (2.7) மனு அளிக்கப்பட்டது.

கோயில் நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.