ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Filed under: தமிழகம் |

ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏழை எளிய குழந்தைகளின் கல்வி பாதிப்புகளையும், பொதுக்கல்வி முறையிலுள்ள சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும்,

பொதுக்கல்வி முறையை பாதுகாக்கவும், சமகாலக் கல்வி முறையிலுள்ள குறைகளை சரிசெய்ய வலியுறுத்தியும், அரசைக் கண்டித்தும், தனது முகநூலில் கருத்துக்களையும் கட்டுரைகளையும் எழுதியதால்,

செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளி ஆசிரியையும், சிறந்த கல்விச் செயற்பாட்டாளருமான உமா மகேஸ்வரி அவர்களை,

தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து, கருத்துரிமைக்கு எதிராகக் ஜனநாயக குரல்வளையை நசுக்கி, அடக்குமுறையைக் கையாண்டதை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்கள் மீதான சட்டவிரோத பணியிடை நீக்க உத்தரவை கைவிட்டு, அவரை உடனடியாகப் பணியில் அமர்த்த, தமிழக அரசை தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வலியுறுத்துகிறது. என்று அந்த கட்சியின் மாநில தலைவர் பூமொழி தெரிவித்துள்ளார்.