95 பவுன் நகையை ஆட்டையை போட்ட  திருமங்கலம் பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர்.

Filed under: தமிழகம் |

 95 பவுன் நகையை ஆட்டையை போட்ட  திருமங்கலம் பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர். அதிரடியாக பணியிடம் நீக்கம் செய்த டி.ஐ.ஜி ரம்யாபாரதி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50).  அதேபோல் திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்துக்க்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டு  அது சம்பந்தமான விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கீதா, ராஜேஷ்-அபினயா தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் அபினயா தனது பெற்றோர் திருமணத்திற்கு போட்ட 95 பவுன் நகையை கணவர் ராஜேசிடம் திருப்பி தரும் படி கேட்டார். ராஜேஷ் 95 பவுன் நகையை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும் படி கூறி உள்ளார். நகையை பெற்ற இன்ஸ்பெக்டர் அதை வங்கியில் ரூ.42 லட்சத்திற்கு அடமானம் வைத்து விட்டார்.

தொடர்ந்து அபினயா தரப்பினர் ராஜேஷ் தரப்பினரிடம் நகையை கேட்கவே தான் அதனை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டதாக ராஜேஷ் கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் இன்ஸ் பெக்டர் கீதாவிடம் நகையை கேட்க அவர் மழுப்பி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீதா 10 பவுன் நகையை திருப்பி தந்தார். மீதி நகையை தரவில்லை.

பின்னர் ராஜேஷ் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் திருமங்கலம் மக ளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து புகார் செய்தார்.  விசாரணை செய்த டி.ஐ.ஜி. ரம்யாபாரதி திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கீதாவை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.