அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம்!

Filed under: அரசியல் |

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.

மாநிலம் முழுவதும் இன்று பாஜக திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இன்று பாஜக தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். அதேபோல் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட பிரமுகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.