அண்ணா பல்கலை அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர்கள் முதலாமாண்டு தேர்வுகளை எழுதினர். அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். இத்தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முனைவர் படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளைhttp://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்கள் செமஸ்டர் தேர்வு முடிவுகளை மிகுந்த ஆர்வத்துடன் இணையதளத்தில் பார்த்து வருகின்றனர்.