அமைச்சரின் பேச்சுக்கு டிடிவியின் டுவிட்டர் பதில்!

Filed under: அரசியல்,தமிழகம் |

டிடிவி தினகரன் டுவிட்டரில், “ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும்’’- என்று பதிலளித்துள்ளார்.

இன்று திமுக சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏ1 ஆகவும், அவருடைய நெருங்கிய தோழி சசிகலாவை ஏ2 ஆகவும் கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை என்று தெரிவித்தார். இது, அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுகவின் சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அவசர அமைச்சர், அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும். இன்று அதிகாரம் கிடைத்ததும் ஆணவத்தின் உச்சத்தில் இவரை போன்றோர் பேசிவருகின்றனர். ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.