அமைச்சர் செந்தில் பாலாஜியின் விமர்சனம்!

Filed under: அரசியல் |

அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! என்று விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜகவுக்காகப் போட்டியிட்ட நிலையில், இதே தொகுதியில், செந்தில் பாலாஜியும் போட்டியிட்டார். அப்போது, செந்தில்பாலாஜிவை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலைமிரட்டல் உட்பட்ட பல பிரிவுகளில் அரவக்குறிச்சி காவல் நிலையதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசக் கூட்டத்தில், அதிமுகவின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறினார். இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. ஆளுங்கட்சி பற்றியும், திமுக கட்சி பற்றியும், அண்ணாமலை விமர்சித்து வருகிறார். இன்று திமுக ஆட்சியின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! 68,019 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 66,000தான் உள்ளன என்பார். களமும் தெரியாது; தரவும் தெரியாது. சமூக ஊடகத்தில் ‘படம்’ ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும்!” என பதிவிட்டுள்ளார்.