‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனகர்த்தா விளக்கம்!

Filed under: சினிமா |

நடிகர் பிரபாஸின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 3 நாட்களில் உலகம் முழுதும் 340 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரியளவில் வரவேற்பில்லை என்றாலும் ஆந்திரா தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாசுர், தனது டுவிட்டர் பக்கத்தில், “சனாதன சேவைக்காகவே இத்திரைப்படத்தை உருவாக்கினோம். ராமாயணத்திலிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடம் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதுதான். சரியோ தவறோ. காலம் மாறும் ஆனால் உணர்வுகள் மட்டும் நிலைத்திருக்கும். இந்த படத்திற்காக 4000 வரிகள் நான் வசனம் எழுதியுள்ளேன். ஆனால் சில வரிகள் சிலரது உணர்வுகளை புண்படுத்திவிட்டன. நூற்றுக்கணக்கான வரிகளில் ஸ்ரீ ராமரை போற்றி இருந்தேன், சீதையின் கற்பை போற்றி இருந்தேன், அவற்றுக்கு பாராட்டு கிடைத்திருக்க வேண்டும் ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை” என விளக்கமளித்துள்ளார்.