ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்!

Filed under: தமிழகம் |

ஆவின் நிறுவனம் நவம்பர் 25 முதல் பச்சை நிற பால் விற்பனையை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக டிலைட் ஊதா நிற பால் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

பச்சை நிற பால் பாக்கெட்டை தமிழகம் முழுதும் 25ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக பச்சை நிற பால் இருந்தது. இதில் 4.5 சதவீத கொழுப்பு சத்து இருந்தது, அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் தயாரிக்க அதிக செலவு ஆகும் காரணத்தினால் அதிக விலைக்கு உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே பச்சை பால் பாக்கெட்டுக்கு பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு சேர்த்து கொண்ட டிலைட் ஊதா நிற பால் விற்பனை செய்யப்படுவதால், அதிக கொழுப்பு சத்து உள்ள பால் தேவைப்படுவோர் தனியார் நிறுவன பால் நிறுவனத்தின் ஆட வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.