இந்தியாவில் புதிதாக 24,354 பேருக்கு கொரோனா!

Filed under: இந்தியா |

புதுடெல்லி, அக் 1:
நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 24,354 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 24,354 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,91,061 ஆக உயர்ந்துள்ளது.

25,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 3,30,68,599ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரே நாளில், 234 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, 4,48,573 ஆக உயர்ந்துள்ளது. 2,73,889 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.