இபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என்றும் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர், “2019 மக்களவைத் தேர்தலை விட, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பல்வேறு விமர்சனங்களை தாண்டி அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பது தான் கட்சிகளின் நிலைப்பாடு, பாஜக கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என நடந்து முடிந்ததை பற்றி பேசக்கூடாது. நடைபெற்ற தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஆட்சி அதிகாரம், பண பலத்தை வைத்து பல கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டதாகவும், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி வீழ்ச்சியையும் வெற்றியையும் சந்தித்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் மக்கள் வேறு விதமாக வாக்களித்துள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தல் வந்தால் எங்களுக்கு சாதகமாக மக்கள் வாக்களிப்பார்கள். சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஒருங்கிணையை அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி, எதிரிகளோடு சேர்ந்து குழப்பத்தை விளைவிக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையோடு வென்று ஆட்சி அமைக்கும். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை. அண்ணாமலையின் கனவு பலிக்காததால் விரக்தியில் கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான். கோவையில் கடந்த முறை பாஜக பெற்ற வாக்குகளை விட அண்ணாமலை குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார்” எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.