இயக்குனருக்கு நடந்த சோகம்!

Filed under: சினிமா |

விஜய் நடிக்க இருந்த “முரசு” பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாக இருந்தது.

2006ம் ஆண்டு விஜய் “திருப்பாச்சி” மற்றும் “சிவகாசி” என இரண்டு ஹிட் படங்களில் நடித்தார். இரண்டு படங்களின் இயக்குனரும் பேரரசுதான். அப்போது “சிவகாசி” திரைப்படத்தின் போதே பேரரசுவின் தம்பி முத்துவடுகு விஜய்க்கு “முரசு” என்ற கதையை சொல்லியுள்ளார். அக்கதையும் விஜய்க்கு பிடிக்கவே படம் தொடங்கும் சூழ்நிலையில் திடீரென கைவிடப்பட்டுள்ளது. இதை சமீபத்தில் முத்துவடுகு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் படம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து அவர் பேசவில்லை. இப்போது இந்த படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை சினிமா பிரபலம் சித்ரா லட்சுமனன் தெரிவித்துள்ளார். அதில் விஜய்க்கு நெருக்கமான சிலர் “ஏற்கனவே பேரரசுகூட ரெண்டு படம். இப்ப அவரு தம்பியோடு படமா. வெளியில எல்லாம் பேரரசு குடும்பம் இல்லன்னா விஜய்யே இல்ல என பேசிக்குறாங்க. தொடர்ந்து ஏன் அவர்களுக்கே படம் கொடுக்குறீங்க.. இடைவெளி விட்டு பண்ணலாம் என சொல்ல, விஜய் மனது மாறிவிட்டார். அதனால் படமே நடக்காமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார்.