இறந்த நிலையில் பச்சிளங்குழந்தை!

Filed under: தமிழகம் |

திருப்பூரில் சாலையோரம் பச்சிளம் குழந்தை இறந்துகிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் தெற்குபாளையம் பகுதியில் ஒரு பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 7 மாதக் குறை பிரசவசத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து அதை மீடு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.