இலங்கை மக்களுக்காக நன்கொடை; முதலமைச்சர் கோரிக்கை!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் அவதிப்படும் மக்களுக்கு தேவையான உதவி செய்வதற்காக தாராளமாக நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நன்கொடைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் நன்கொடை வழங்க வேண்டிய வங்கி கணக்கு எண்ணையும் அறிவித்துள்ளார்.