எலான் மஸ்க் மனித மூளையில் சிப் பொருத்த திட்டமா?

Filed under: உலகம் |

விரைவில் மனித மூளையில் சிப் வைத்து கணிணி மூலம் எலான் மஸ்க் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எலான் மஸ்க் உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர், கார் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்துள்ளதைப் போன்று, மனிதர்களின் மூளையில் சிப்பை பொறுத்தி அதை கணிணியின் மூலம் இயங்க வைக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மனித மூளைக்குள் சிப் பொருத்தி, அதனை கணிணியுடன் இணைத்து மனதில் நினைப்பதை கணிணி மூலம் செயல்படுத்துவதை எலான் மஸ்க். விரைவில் மனிதர்களுக்கு சோதனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதற்கு விமர்சனங்கள் குவிந்தாலும், அறிவியல் ஆர்வலர்கள் இதற்கு வரவேற்பு அளித்த வண்ணம் உள்ளனர்.